ETV Bharat / state

ஆணின் எரிந்த தலை... நெடுஞ்சாலையில் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை! - எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் தலை

மதுரை: திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆணின் தலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Burnt human head, எரிந்த ஆண் தலை
Burnt human head
author img

By

Published : Jan 24, 2020, 10:18 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வெங்கடேஷ் (21). கடந்த 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், அதன்பின் வீடு திரும்பாததால், வெங்கடேஷின் தாயார் தனம், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின் பேரில் காணாமல் போன வெங்கடேஷை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக டி.புதுப்பட்டியைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் டி. குன்னத்தூர் அருகே சாலை ஓரத்தில் துர்நாற்றம் வீசுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில் ஆணின் தலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட எரிந்த ஆண் தலை

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சாலையோரத்தில் கிடந்த எரிந்த தலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அந்தத் தலையைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் இறந்தது கடந்த 11ஆம் தேதி காணாமல் போன வெங்கடேஷாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே பிடித்துவைத்துள்ள நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Burnt human head, எரிந்த ஆண் தலை
காணாமல் போன இளைஞர் வெங்கடேஷ்

இந்நிலையில், வெங்கடேஷ் காணாமல் போனது குறித்து அவரது தாய் தனம் தெரிவிக்கையில், அருகிலுள்ள பந்தல் அமைப்பாளர் முத்துப்பாண்டியிடம் வெங்கடேஷ் பந்தல் அமைக்கும் வேலை செய்துவந்தார். இதனிடையே கடந்த 11ஆம் தேதி ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக பந்தல் வேலைக்குச் சென்ற வெங்கடேஷ் மாலை 5 மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததார். அப்போது முத்துப்பாண்டி, அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் வெங்கடேசை அழைத்துச் சென்றனர். அதன்பின் எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

பாதி எரிந்த நிலையில் சாலை ஓரத்தில் ஆண் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வெங்கடேஷ் (21). கடந்த 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், அதன்பின் வீடு திரும்பாததால், வெங்கடேஷின் தாயார் தனம், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின் பேரில் காணாமல் போன வெங்கடேஷை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக டி.புதுப்பட்டியைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் டி. குன்னத்தூர் அருகே சாலை ஓரத்தில் துர்நாற்றம் வீசுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில் ஆணின் தலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட எரிந்த ஆண் தலை

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சாலையோரத்தில் கிடந்த எரிந்த தலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அந்தத் தலையைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் இறந்தது கடந்த 11ஆம் தேதி காணாமல் போன வெங்கடேஷாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே பிடித்துவைத்துள்ள நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Burnt human head, எரிந்த ஆண் தலை
காணாமல் போன இளைஞர் வெங்கடேஷ்

இந்நிலையில், வெங்கடேஷ் காணாமல் போனது குறித்து அவரது தாய் தனம் தெரிவிக்கையில், அருகிலுள்ள பந்தல் அமைப்பாளர் முத்துப்பாண்டியிடம் வெங்கடேஷ் பந்தல் அமைக்கும் வேலை செய்துவந்தார். இதனிடையே கடந்த 11ஆம் தேதி ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக பந்தல் வேலைக்குச் சென்ற வெங்கடேஷ் மாலை 5 மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததார். அப்போது முத்துப்பாண்டி, அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் வெங்கடேசை அழைத்துச் சென்றனர். அதன்பின் எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

பாதி எரிந்த நிலையில் சாலை ஓரத்தில் ஆண் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:*திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாக்குப்பையில் எரிந்த நிலையில் ஆண் தலை காணாமல் போன வாலிபர் எரித்துக் கொலையா? 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை* Body:*திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாக்குப்பையில் எரிந்த நிலையில் ஆண் தலை காணாமல் போன வாலிபர் எரித்துக் கொலையா? 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை*



திருமங்கலம் அருகே 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் சாக்குப்பையில் தலை கண்டெடுக்கப்பட்டது அடுத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வெங்கடேஷ் 21 இவர் கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை இதனை அடுத்து வெங்கடேஷின் தாயார் தனம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல்போன வெங்கடேஷை கண்டுபிடிக்க திருமங்கலம் டி.எஸ்.பி அருண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த தனிப்படை போலீசார்.


டி.புதுப்பட்டியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மதியம் திருமங்கலம் ராஜபாளையம் சாலையில் டி.குன்னத்தூர் அருகே சாலை ஓரத்தில் துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சோதனையிட்டபோது அங்கு சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில் தலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசார் திருமங்கலம் டி.எஸ்.பி அருணுக்கு தகவல் கொடுத்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி அருண் எரிந்த தலையை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சாலையோரத்தில் கிடந்த தலையை ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து எரிந்த தலையை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இறந்தது கடந்த 11ஆம் தேதி காணாமல் போன வெங்கடேஷாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் காணாமல் போனது குறித்து அவரது தாய் தனம் தெரிவிக்கையில் தனது மகன் வெங்கடேஷ் அருகிலுள்ள பந்தல் அமைப்பாளர் முத்துப்பாண்டியிடம் வேலை செய்து வருவதாகவும் கடந்த 11ஆம் தேதி ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக பந்தல் வேலைக்கு சென்ற வெங்கடேஷ் மாலை 5 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் வெங்கடேசை அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர் 11ம் தேதி போன தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவித்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் காணாமல் போன தனது மகனை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில் வெங்கடேஷை தேடிவரும் போலீசார் சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை வெங்கடேஷ் உடைய தலையா? அல்லது வேறு யாருமா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமங்கலம் அருகே வாலிபர் காணாமல் போன நிலையில் பாதி எரிந்த நிலையில் சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உள்ளாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.