ETV Bharat / state

கனிமொழி பணம் கொடுத்தாரா இல்லையானு அவர்கிட்ட கேளுங்க - கடம்பூர் ராஜு

author img

By

Published : Oct 3, 2019, 9:53 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் பணம் கொடுத்தாரா இல்லையா எனக் கனிமொழியிடம் கேளுங்கள் என்று செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Kadambur Raju

மதுரை வந்திருந்த செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் பணத்தை நம்பித்தான் அதிமுக போட்டியிடுகிறது என்று கனிமொழி கூறியது குறித்து கேட்கப்பட்டதற்கு, "யார் அவ்வாறு செய்வார்கள் என மக்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி பணம் கொடுத்தாரா இல்லையா என்று அவரிடமே கேட்டாள் நன்றாகத் தெரியும்" என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் ஏன் மழைக்காலங்களில் அறிவிக்கப்படுகிறது எனச் செய்தியாளர்கள் கேட்தற்கு, "வார்ட் வரையறை உள்ளிட்டவற்றிலிருந்த சிக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தயாராகியுள்ளோம். தற்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படாது. ஏனெனில் தேர்தல் ஒருநாள் மட்டுமே அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும்" என்று கூறினார்.

பேனர் வைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்த கேள்விக்கு," சீன அதிபர் வருகின்ற அந்த நிகழ்ச்சி பன்னாட்டு சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பேனர்கள் வைக்கவே அனுமதி கோரியுள்ளோம்." என்று தெரிவித்தார்.

கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு, எந்த புள்ளி விவரமும் மறைக்கப்படுவதில்லை என்றும், டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.


இதையும் படிக்கலாமே: அஜினோமோட்டோவிற்கு விரைவில் தடை?... அமைச்சர் கருப்பணன்

மதுரை வந்திருந்த செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் பணத்தை நம்பித்தான் அதிமுக போட்டியிடுகிறது என்று கனிமொழி கூறியது குறித்து கேட்கப்பட்டதற்கு, "யார் அவ்வாறு செய்வார்கள் என மக்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி பணம் கொடுத்தாரா இல்லையா என்று அவரிடமே கேட்டாள் நன்றாகத் தெரியும்" என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் ஏன் மழைக்காலங்களில் அறிவிக்கப்படுகிறது எனச் செய்தியாளர்கள் கேட்தற்கு, "வார்ட் வரையறை உள்ளிட்டவற்றிலிருந்த சிக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தயாராகியுள்ளோம். தற்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படாது. ஏனெனில் தேர்தல் ஒருநாள் மட்டுமே அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும்" என்று கூறினார்.

பேனர் வைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்த கேள்விக்கு," சீன அதிபர் வருகின்ற அந்த நிகழ்ச்சி பன்னாட்டு சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பேனர்கள் வைக்கவே அனுமதி கோரியுள்ளோம்." என்று தெரிவித்தார்.

கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு, எந்த புள்ளி விவரமும் மறைக்கப்படுவதில்லை என்றும், டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.


இதையும் படிக்கலாமே: அஜினோமோட்டோவிற்கு விரைவில் தடை?... அமைச்சர் கருப்பணன்

Intro:மதுரை விமான நிலையத்தில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்Body:மதுரை விமான நிலையத்தில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்

_இடைத்தேர்தலில் பணத்தை நம்பித்தான் அதிமுக போட்டியிடுகிறது என்று கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு_

யார் அவ்வாறு செய்வது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரியும்.

குறிப்பாக எங்கள் தொகுதி மக்களுக்கு யார் பணத்தைக்கொண்டு போட்டியிடுகிறார்கள் என்று தெரிந்த விஷயம்.

அதனை அவர் கூறுவது வேடிக்கையானது நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்தாரா இல்லையா என்பது குறித்து அவரிடமே கேட்டாள் நன்றாக தெரியும்.

_திரைப்படங்கள் திரைப்படங்களுக்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப் பட்ட நிலையில் தற்போது ஆடியோ லான்ச் பல ஆயிரம் செலவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு_

பழைய படங்கள் வெளியாகிய நிலையில் வெளியாகின்ற நேரங்களில் திரையரங்குகளை கட்டுப்படுத்தும் பணியை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கி உள்ளோம் அனைவரும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்கள்.

நீங்கள் கூறுவது போன்று திரைப்பட தயாரிப்பாளரும் அதில் நடித்த நடிகர் சார்ந்தது அது பொதுமக்களுக்கு வினியோகிக்க படவில்லை அவர்களின் சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றார்கள் அதைப்பற்றி புகார்கள் வருகின்றன அதுபற்றி அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும்.

_உள்ளாட்சி தேர்தல் நடைபெற கூடாது என்பதற்காகவே தான் மழைக்காலங்களில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து வருகின்றனர் என்பது குறித்த கேள்விக்கு_

தேர்தல் நடத்துவது என்றால் தற்போதைய அதிமுக அரசு நீதிமன்றங்கள் கூறி வரும் அத்தனை வழிமுறைகளையும், நீதிமன்ற கூறிய ஆலோசனை மற்றும் அம்சங்களை ஏற்று அனைத்து தொகுதிகளையும் உள்ளாட்சி மன்ற வார்டு உட்பட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற அனைத்து வார்டுகளிலும் சரிசமமாக மக்கள் தொகைக்கு ஏற்ப மிகப்பெரிய மாற்றத்தை செய்து முடித்துள்ளோம் அதற்காக சிறிது கால அவகாசம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டமன்ற தொகுதியை வரையறை செய்வதற்கு 30 ஆண்டுகள் ஆகிறது ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் மண்டல பொருத்தவரை க்கு பல்லாயிரக்கணக்கான வட்டங்களை சீரமைத்து அதில் பெண்கள் வார்டு இன சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தற்போது அனைத்து அம்சங்களும் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தயார் நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் ஒத்திவைப்பு என்பது பிரச்சினையாக வராது தேர்தல் நடத்துவது ஒரு நாள் மட்டுமே அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் எனவே எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

_தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது அது குறித்த புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு_

எந்த புள்ளி விவரமும் அழைக்கப்படுவதில்லை புள்ளிவிவரம் தானாகவே வெளிப்பட்டுவிடும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக உயிரிழப்பு ஏதும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்து அனைத்து மருத்துவமனைகள் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஒன்றியம் தாலுகா அளவிலும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து குறிப்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று மக்களிடம் கொண்டு சென்று உள்ளோம்.

டெங்கு பாதிப்பு தமிழகத்தில் தான் மிக குறைவு என்ற நிலையை பெற்றுள்ளது.

_பேனர் வைக்க கூடாது என்ற தமிழக அரசு கூறியிருந்த நிலையில் தற்போது சீன அதிபர் வருகையை ஒட்டி வைத்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்த கேள்விக்கு_

சீன அதிபர் வருகின்ற அந்த நிகழ்ச்சியை பன்னாட்டு சம்பந்தமான நிகழ்ச்சியை மாண்புமிகு பாரத பிரதமர் இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று பெருமை சேர்த்துள்ளார் ஏற்கனவே நீதிமன்றத்தில் என்ன கூறியிருந்தார்கள் பொதுமக்களுக்கு கூறியிருந்தது என்னவென்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேனர்கள் வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

எனவே இவ்வாறான நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அரசாக அரசு முன்வந்து எவ்வாறாக பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பாக நீதிமன்றம் கூறும் நடைமுறையின் படியே தான் பேனர் வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளது இது நிகழ்ச்சியின் தன்மையையும் அதன் சூழ் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

_மீண்டும் அவ்வாறான அசம்பாவிதம் நடைபெறுமாயின் புகாரானது நீதிமன்றத்தில் அளிக்கப்படுமா தமிழக அரசின் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு_

பேனர் வைப்பது குறித்து நீதிமன்றத்திலும் சட்ட ஆலோசகர் இடமும் இருப்பதால் அதை பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.