ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டு... தயாராகும் காளைகளும், காளையர்களும்: காத்திருக்கும் பரிசுகள்!

author img

By

Published : Jan 15, 2021, 7:16 AM IST

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும், வெற்றி பெறும் காளைகளுக்கு காங்கேயம் பசு மாடும் பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில் இன்று (ஜன.15) மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும், காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்பட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள், மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.

காயம் படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 அவசர ஊரதிகள் தயார் நிலையில் உள்ளன. காயம் படும் காளைகளை அழைத்துச் செல்ல இரண்டு கால் நடை அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன.

வீரர்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் முன்னிலையில் மது போதை பரிசோதனை செய்யப்பட்டு, ரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படும். உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டி-சர்ட் அணிவிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னரே, காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு எல்இடி டி.வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில், மெத்தை, சைக்கிள் போன்ற விலை உயர்ந்த எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசு மாடும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், மூன்று காவல் துறைக் கண்காணிப்பாளர், 7 காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர், 32 காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், 65 ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் பாலமேடு ஜல்லிக்கட்டை ஃபேஸ்புக், யு - ட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலை செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர்களாக இருவர் தேர்வு!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில் இன்று (ஜன.15) மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும், காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்பட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள், மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.

காயம் படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 அவசர ஊரதிகள் தயார் நிலையில் உள்ளன. காயம் படும் காளைகளை அழைத்துச் செல்ல இரண்டு கால் நடை அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன.

வீரர்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் முன்னிலையில் மது போதை பரிசோதனை செய்யப்பட்டு, ரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படும். உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டி-சர்ட் அணிவிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னரே, காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு எல்இடி டி.வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில், மெத்தை, சைக்கிள் போன்ற விலை உயர்ந்த எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசு மாடும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், மூன்று காவல் துறைக் கண்காணிப்பாளர், 7 காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர், 32 காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், 65 ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் பாலமேடு ஜல்லிக்கட்டை ஃபேஸ்புக், யு - ட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலை செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர்களாக இருவர் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.