மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியா என்பவரின் இரண்டாவது மகன் திருமலேஷ், டெங்கு காய்ச்சலால் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாதிக்கப்பட்டார்.
பின்னர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவரது ஆறு வயது மகன் சாய்சரணுக்கு, கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கும் டெங்கு உறுதியானது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த சிறுவனும் உயிரிழந்தார்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைதூக்கும் டெங்கு...பாதுகாத்து கொள்வது எப்படி?