ETV Bharat / state

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு இடைக்கால தடை? நீதிமன்றம் விசாரணை!

author img

By

Published : Mar 14, 2023, 9:12 AM IST

கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரணை நடத்துகிறது.

Etv Bharat
Etv Bharat

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்துகின்றனர்.

இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர் அருகில் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், வெளியில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எந்த விதமான அவசர கால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட வேண்டும்.

மேலும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறி இருந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு முறையான அனுமதி பெற்ற பின்னரே சரவணா ஸ்டோர் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்க ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்துகின்றனர்.

இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர் அருகில் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், வெளியில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எந்த விதமான அவசர கால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட வேண்டும்.

மேலும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறி இருந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு முறையான அனுமதி பெற்ற பின்னரே சரவணா ஸ்டோர் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்க ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.