ETV Bharat / state

'சூரரைப் போற்று' சுவரொட்டி ஒட்டி ரசிகர்கள் வேதனை: செவிமடுப்பாரா சூர்யா?

author img

By

Published : Aug 26, 2020, 7:07 AM IST

மதுரை: நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் ஓடிடியில் வௌியிடக் கூடாது என அவரது ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை அடித்து வேதனை தெரிவித்துள்ளனர்.

Actor Surya
Actor Surya

கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்பை நிறைவுசெய்த பல்வேறு படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பரிதவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நிறைவுற்று, கடந்த நான்கு மாதங்களாகத் திரையிட முடியாமல் இருந்தது. இதனால் சூர்யா இப்படத்தினை வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி மூலமாக வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்புக்கு திரைப்படத் துறையில் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில், மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் எனவும், ஓடிடியில் வெளியாகக்கூடாது என்றும், இந்தப் படத்திற்காக நீண்ட காலம் காத்திருக்கிறோம் எனவும், சூர்யாவின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது எனவும் சுவரொட்டிகள் அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

மதுரை
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்
நடிகர் சூர்யாவின் வார்த்தைக்காகத்தான் மிகப் பணிவோடு கேட்கிறோம் என அதில் வேண்டுகோளும்விடுத்துள்ளனர். இந்தச் சுவரொட்டி மதுரையில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு சூர்யா செவிமடுப்பாரா..? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா..? என்பதுதான் மதுரையிலுள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:'எங்கள் உழைப்பை உலக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க இருப்பது மகிழ்ச்சி'

கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்பை நிறைவுசெய்த பல்வேறு படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பரிதவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நிறைவுற்று, கடந்த நான்கு மாதங்களாகத் திரையிட முடியாமல் இருந்தது. இதனால் சூர்யா இப்படத்தினை வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி மூலமாக வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்புக்கு திரைப்படத் துறையில் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில், மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் எனவும், ஓடிடியில் வெளியாகக்கூடாது என்றும், இந்தப் படத்திற்காக நீண்ட காலம் காத்திருக்கிறோம் எனவும், சூர்யாவின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது எனவும் சுவரொட்டிகள் அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

மதுரை
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்
நடிகர் சூர்யாவின் வார்த்தைக்காகத்தான் மிகப் பணிவோடு கேட்கிறோம் என அதில் வேண்டுகோளும்விடுத்துள்ளனர். இந்தச் சுவரொட்டி மதுரையில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு சூர்யா செவிமடுப்பாரா..? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா..? என்பதுதான் மதுரையிலுள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:'எங்கள் உழைப்பை உலக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க இருப்பது மகிழ்ச்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.