நாடு முழுவதும் கடந்த 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரியில் மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பெண் காவலர்களுக்கு சிறப்பு புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்துகொண்டு கர்ப்ப பை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
மேலும் இதில் கலந்துகொண்ட பெண் காவலர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: குக்கிராமங்களில் மருத்துவ முகாம்