ETV Bharat / state

கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது! - கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது

கிருஷ்ணகிரி: கே.ஏ. நகர் வெங்கிட்டாபுரம் அருகே கடவுச்சீட்டு இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

வங்கதேச தம்பதி கைது
வங்கதேச தம்பதி கைது
author img

By

Published : Jan 4, 2020, 10:28 AM IST

கிரு‌‌ஷ்ணகிரி தர்கா கே.ஏ. நகர் வெங்கிட்டாபுரம் ஊராட்சிப் பகுதியில் இந்தியாவின் அருகில் உள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சட்டத்திற்குப் புறம்பாக கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் தங்கியுள்ளனர்.

இது குறித்து, கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஆய்வாளர் சுரே‌‌ஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த இக்பால்முல்லா (34), தஸ்லீமா (25), லக்கி (19) ஆகியோர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இக்பால் முல்லாவும் தஸ்லீமாவும் கணவன்-மனைவி என்பதும் லக்கி இக்பால், முல்லாவின் நண்பர் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூன்று பேர்
கைதுசெய்யப்பட்ட மூன்று பேர்

இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனால், இந்த நோய்க்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு தனது மனைவி தஸ்லீமா, இரண்டு பெண் குழந்தைகள் தொன்னி முல்லா (3), முன்னி முல்லா (1½), நண்பர் லக்கி ஆகியோருடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இக்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்குமாறும் தான் மருத்துவச் செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இக்பால் முல்லா தனது மனைவி, குழந்தைகளுடன் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அவர்கள் கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு எதுவும் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இக்பால் முல்லா, அவரது மனைவி தஸ்லீமா, லக்கி ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சென்னை புழல் சிறையிலடைத்தனர். மேலும், இக்பால் முல்லா, தஸ்லீமாவின் குழந்தைகளும் அவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: முகவர்கள் இல்லாமல் வாக்குப்பெட்டி திறப்பு - தர்ணாவில் குதித்த திமுகவினர்

கிரு‌‌ஷ்ணகிரி தர்கா கே.ஏ. நகர் வெங்கிட்டாபுரம் ஊராட்சிப் பகுதியில் இந்தியாவின் அருகில் உள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சட்டத்திற்குப் புறம்பாக கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் தங்கியுள்ளனர்.

இது குறித்து, கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஆய்வாளர் சுரே‌‌ஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த இக்பால்முல்லா (34), தஸ்லீமா (25), லக்கி (19) ஆகியோர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இக்பால் முல்லாவும் தஸ்லீமாவும் கணவன்-மனைவி என்பதும் லக்கி இக்பால், முல்லாவின் நண்பர் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூன்று பேர்
கைதுசெய்யப்பட்ட மூன்று பேர்

இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனால், இந்த நோய்க்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு தனது மனைவி தஸ்லீமா, இரண்டு பெண் குழந்தைகள் தொன்னி முல்லா (3), முன்னி முல்லா (1½), நண்பர் லக்கி ஆகியோருடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இக்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்குமாறும் தான் மருத்துவச் செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இக்பால் முல்லா தனது மனைவி, குழந்தைகளுடன் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அவர்கள் கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு எதுவும் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இக்பால் முல்லா, அவரது மனைவி தஸ்லீமா, லக்கி ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சென்னை புழல் சிறையிலடைத்தனர். மேலும், இக்பால் முல்லா, தஸ்லீமாவின் குழந்தைகளும் அவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: முகவர்கள் இல்லாமல் வாக்குப்பெட்டி திறப்பு - தர்ணாவில் குதித்த திமுகவினர்

Intro:பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச தம்பதி உட்பட 3 பேர் கைது.Body: பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச தம்பதி உட்பட 3 பேர் கைது.


கிரு‌‌ஷ்ணகிரி தர்கா கே.ஏ.நகர் வெங்கிட்டாபுரம் ஊராட்சி பகுதியில் இந்தியாவின் அருகில் உள்ள அன்பில் நட்புறவு நாடான வங்கதேசத்தை சேர்ந்த கணவன் - மனைவி உள்பட 3 பேர் சட்டத்திற்கு புறம்பாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருப்பதாக கிரு‌‌ஷ்ணகிரி கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.


அதில் வங்க தேசத்தை சேர்ந்த இக்பால்முல்லா (வயது 34), தஸ்லீமா (25), லக்கி (19) ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இக்பால் முல்லாவும், தஸ்லீமாவும் கணவன் - மனைவி ஆவார்கள். லக்கி இக்பால் முல்லாவின் நண்பர் ஆவார். இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு வந்துள்ளார். அங்கிருந்து சென்னைக்கு தனது மனைவி தஸ்லீமா மற்றும் 2 பெண் குழந்தைகள் தொன்னிமுல்லா (3), முன்னி முல்லா (1½) மற்றும் நண்பர் லக்கியுடன் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இக்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவை சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்குமாறும், தான் மருத்துவ செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இக்பால் முல்லா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர் லக்கி ஆகியோருடன் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இக்பால் முல்லா, அவரது மனைவி தஸ்லீமா, லக்கி ஆகிய 3 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இக்பால் முல்லா, தஸ்லீமாவின் குழந்தைகளும் அவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.