ETV Bharat / state

பெண்ணுடன் உறவு: சூளகிரி அருகே விவசாயி வெட்டிப் படுகொலை!

author img

By

Published : Sep 22, 2020, 9:04 PM IST

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே பெண்ணுடன் உறவு வைத்திருந்த விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

விவசாயி
விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜகிதாபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இவர் அருகிலுள்ள ஊர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார்.

இதன் காரணமாக பெண்ணின் உறவினர்கள், சில அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து கோழிப்பண்ணை அருகே விவசாயியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இதைக்கண்டவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விவசாயியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து சூளகிரி காவல் துறையினர் இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜகிதாபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இவர் அருகிலுள்ள ஊர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார்.

இதன் காரணமாக பெண்ணின் உறவினர்கள், சில அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து கோழிப்பண்ணை அருகே விவசாயியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இதைக்கண்டவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விவசாயியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து சூளகிரி காவல் துறையினர் இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.