ETV Bharat / state

டாஸ்மாக்கும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கரோனா உயர்வு - corona latest update

கிருஷ்ணகிரி: டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கரோனா உயர்வுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.

chellakumar MP
chellakumar MP
author img

By

Published : May 18, 2020, 2:26 PM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு உத்தரவால் முழுமையாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறந்ததன் விளைவாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருமானம் தேவையற்ற ஒன்று.

தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஆரம்பத்திலேயே வழி செய்திருக்க வேண்டும். அவ்வாறு அரசு செய்யாத காரணத்தால் அவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு உத்தரவால் முழுமையாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறந்ததன் விளைவாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருமானம் தேவையற்ற ஒன்று.

தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஆரம்பத்திலேயே வழி செய்திருக்க வேண்டும். அவ்வாறு அரசு செய்யாத காரணத்தால் அவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.