கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் வேளாண்மை கல்லூரியில் வெளிநாடு செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் விஜயராகவன், மேலாளர் திரு காளமேகம், மாவட்ட நீதித் துறை கண்காணிப்பாளர் சம்பத், பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆகியோர்கள் தொடங்கிவைத்தனர்.
வெளிநாடு செல்பவர்க்கான பாதுகாப்பு பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் மாநில பயிற்சியாளர் விஸ்வநாதனால் அளிக்கப்பட்டது.
இந்தப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் சூளகிரி வட்ட ஆட்சியர் ரெஜினா, மாவட்ட வட்டார அலுவலர் வளர்மதி, வருவாய் அலுவலர்கள் கோவிந்தராஜ், வசந்தி, அத்திமுகம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில பயிற்சியாளர் விஸ்வநாதன், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பாதுகாப்புக்காக எவ்வாறு இந்திய தூதரகத்தை நாடுவது என்றும் அங்கு அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் பற்றியும் அங்கிருந்து எவ்வாறு பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு - மாணவர்கள் பங்கேற்பு