புகலூர் வாய்க்கால் பகுதியான நொய்யல், முத்தனூர், நஞ்சை புகளூர் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்ட பிறகு நெரூர் வாய்க்கால் செவ்வந்திபாளையம், முனியப்பனூர், கள்ளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வடிகால்களையும், அங்கு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள நீர் வழித்தடங்களை தூர்வார அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செயல்படுவது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ’கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’: பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு