ETV Bharat / state

விபத்துகள் குறைந்த மாநிலம் தமிழ்நாடு - எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

author img

By

Published : Jan 22, 2020, 7:17 PM IST

கரூர்: போக்குவரத்து விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்
எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவானது இன்று கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கடந்த வாரம் மத்திய அரசு சாலை போக்குவரத்து விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்தது. அதற்கான சான்றிதழை மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் என்னிடம் வழங்கினர்" என்றார்.

இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தலைக்கவசம் வழங்கி மருத்துவ சிகிச்சை முகாமையும் அவர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: சாலை விதிகளை மீறுவோர் கேமரா மூலம் கண்காணிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவானது இன்று கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கடந்த வாரம் மத்திய அரசு சாலை போக்குவரத்து விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்தது. அதற்கான சான்றிதழை மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் என்னிடம் வழங்கினர்" என்றார்.

இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தலைக்கவசம் வழங்கி மருத்துவ சிகிச்சை முகாமையும் அவர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: சாலை விதிகளை மீறுவோர் கேமரா மூலம் கண்காணிப்பு!

Intro:மத்திய அரசின் மூலம் சாலை போக்குவரத்து விபத்தை குறைத்த மாநிலம் தமிழ்நாடு - தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்Body:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் துறை சார்பில் 31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இலவச பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமை எழுத்தர் மேலும் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் :-
கடந்த வாரம் மத்திய அரசால் சாலை போக்குவரத்து விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ் நாட்டை தேர்வு செய்து வழங்கியிருக்கிறது. அதனை மத்திய அரசு சார்பில் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினர் அதனை தமிழகத்தின் சார்பில் நான் பெற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக தலைக்கவசம் வழங்கினார் மேலும் மருத்துவ சிகிச்சை முகாம் போன்றவற்றை
பார்வையிட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.