ETV Bharat / state

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

author img

By

Published : Apr 9, 2021, 8:35 PM IST

கரூர்: அனைத்து வயதினருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்க செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்
பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்களிடத்திலும் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக அறிகின்றோம். தமிழ்நாட்டிலும் இந்நிலை இருப்பதால், தடுப்பூசி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்
பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

இத்தகைய காலத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசி உற்பத்தி செய்வதை அதிகரிக்க 3,000 கோடி நிதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தத் தருணத்தில் தொகுதியின் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மேம்பாட்டு நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் பிரதிநிதியாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்
பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

இந்த நிதி உள்பட பி.எம். கேர்ஸ் இன் கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடி தேவையான தடுப்பூசி தயாரிப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய காலத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமாக புதிய நாடாளுமன்றம், அலுவலகங்கள் அமைக்க சென்ட்ரல் விஸ்டா பிராஜெக்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. இது அறமற்ற செயல் ஆகும்.

எனவே மத்திய அரசு உடனடியாக முன்வந்து, தேவையில்லாத ஆடம்பர திட்டங்களுக்கு செலவு செய்வதை விடுத்து, தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நோய் பரவலை குறைக்க வேண்டுமென்றால், வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை பல நாடுகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவியுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதுடன், தடுப்பூசி மையங்கள் மூலம் அனைத்து வயதினருக்கும் முன்பதிவிற்கான தேவை இல்லாமல் தடுப்பூசியை விரைந்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்களிடத்திலும் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக அறிகின்றோம். தமிழ்நாட்டிலும் இந்நிலை இருப்பதால், தடுப்பூசி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்
பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

இத்தகைய காலத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசி உற்பத்தி செய்வதை அதிகரிக்க 3,000 கோடி நிதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தத் தருணத்தில் தொகுதியின் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மேம்பாட்டு நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் பிரதிநிதியாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்
பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்

இந்த நிதி உள்பட பி.எம். கேர்ஸ் இன் கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடி தேவையான தடுப்பூசி தயாரிப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய காலத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமாக புதிய நாடாளுமன்றம், அலுவலகங்கள் அமைக்க சென்ட்ரல் விஸ்டா பிராஜெக்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. இது அறமற்ற செயல் ஆகும்.

எனவே மத்திய அரசு உடனடியாக முன்வந்து, தேவையில்லாத ஆடம்பர திட்டங்களுக்கு செலவு செய்வதை விடுத்து, தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நோய் பரவலை குறைக்க வேண்டுமென்றால், வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை பல நாடுகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவியுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதுடன், தடுப்பூசி மையங்கள் மூலம் அனைத்து வயதினருக்கும் முன்பதிவிற்கான தேவை இல்லாமல் தடுப்பூசியை விரைந்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.