ETV Bharat / state

மூன்று நாள்களுக்குப் பின்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் உடல்

author img

By

Published : Sep 25, 2020, 9:27 PM IST

கரூர் :ஆலமரத்துப்பட்டி பகுதியில் ரமேஷ் (34) என்ற இளைஞரை கிணற்றிலிருந்து மூன்று நாள்களுக்குப் பின்பு சடலமாக மீக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் கிணற்றிலிருந்து மீட்பு
உடல் கிணற்றிலிருந்து மீட்பு

கரூர் மாவட்டம் ஆலமரத்து பட்டியில் கிணற்றில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ரமேஷ் என்ற இளைஞர் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்பு அவரை அப்பகுதியில் காணவில்லை என்பதால் உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று (செப்.25) கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் தேடியபோது ரமேஷ் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

உடல் கிணற்றிலிருந்து மீட்பு
உடல் கிணற்றிலிருந்து மீட்பு

மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிணற்றில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இளைஞரின் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி கொலை - மாற்றுத்திறனாளி இளைஞர் கைது

கரூர் மாவட்டம் ஆலமரத்து பட்டியில் கிணற்றில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ரமேஷ் என்ற இளைஞர் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்பு அவரை அப்பகுதியில் காணவில்லை என்பதால் உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று (செப்.25) கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் தேடியபோது ரமேஷ் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

உடல் கிணற்றிலிருந்து மீட்பு
உடல் கிணற்றிலிருந்து மீட்பு

மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிணற்றில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இளைஞரின் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி கொலை - மாற்றுத்திறனாளி இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.