கரூர் மாவட்டம் வேலப்பாடி பஞ்சாயத்தைச் சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்திவரும் பெரியசாமிக்கு பிரியா என்ற மனைவி இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் பிரியாவின் உடல் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பிரியாவின் உடல் கிடந்த வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் நுகர்வு அதிகமாக உள்ளதால், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டுக்கு வழிகாட்டும் மாணவி ஆஸ்தா!