ETV Bharat / state

பெருகும் ஐதீக கட்டுப்பாடுகள்: ஆண் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்! - ஆண் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்

கரூர்: இடையப்பட்டி கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை பெண்கள் சுமந்து கொண்டு சுடுகாட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் சடலத்தை தூக்கிச் செல்லும் பெண்கள்
author img

By

Published : Nov 23, 2019, 12:59 AM IST

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (60) என்பவர், நேற்று முன்தினம் (நவ.21) இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். கோயில் பூசாரியான இவரை வடக்குத்தெருவில் உள்ள மல்லான் கைதட்டு கோயில் வழியாக சுடுகாட்டிற்கு கொண்டுச் சென்றனர்.

அப்போது, அவ்வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சடலத்தை எங்கள் பகுதியின் வழியாக கொண்டுச் செல்ல கூடாது என காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக நாங்கள் இறந்தவர்களை இந்த பாதையில் தான் எடுத்துச் செல்கிறோம், தற்போது திடீரென மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆண் சடலத்தை தூக்கிச் செல்லும் பெண்கள்

மேலும், இறந்த துரைசாமியின் சடலத்தை நடு வீதியில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காவல் துறையிடம் பேசிய பொதுமக்கள், வழக்கமாக இந்தப் பாதையைதான் பயன்படுத்தி வருகிறோம். மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என்றனர். ஏழு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பொறுமையை இழந்த பெண்கள், தாங்களே சடலத்தை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றனர்.

ஐதீக கட்டுப்பாடுகளால் ஆண் சடலத்தை பெண்களே சுமந்து செல்லும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சுடுகாட்டு பாதை கோரி சடலத்துடன் போராட்டம்!

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (60) என்பவர், நேற்று முன்தினம் (நவ.21) இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். கோயில் பூசாரியான இவரை வடக்குத்தெருவில் உள்ள மல்லான் கைதட்டு கோயில் வழியாக சுடுகாட்டிற்கு கொண்டுச் சென்றனர்.

அப்போது, அவ்வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சடலத்தை எங்கள் பகுதியின் வழியாக கொண்டுச் செல்ல கூடாது என காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக நாங்கள் இறந்தவர்களை இந்த பாதையில் தான் எடுத்துச் செல்கிறோம், தற்போது திடீரென மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆண் சடலத்தை தூக்கிச் செல்லும் பெண்கள்

மேலும், இறந்த துரைசாமியின் சடலத்தை நடு வீதியில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காவல் துறையிடம் பேசிய பொதுமக்கள், வழக்கமாக இந்தப் பாதையைதான் பயன்படுத்தி வருகிறோம். மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என்றனர். ஏழு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பொறுமையை இழந்த பெண்கள், தாங்களே சடலத்தை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றனர்.

ஐதீக கட்டுப்பாடுகளால் ஆண் சடலத்தை பெண்களே சுமந்து செல்லும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சுடுகாட்டு பாதை கோரி சடலத்துடன் போராட்டம்!

Intro:கரூர் அருகே இறந்தவர் சடலத்துடன் பொதுமக்கள் மறியல் ! போலீஸ் குவிப்பு – பரபரப்புBody:கரூர் அருகே இறந்தவர் சடலத்துடன் பொதுமக்கள் மறியல் ! போலீஸ் குவிப்பு – பரபரப்பு

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்குட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், இங்குள்ள வடக்குத்தெருவில் மல்லான் கைதட்டு கோயில் உள்ளது. இந்த வழியாக ஒரு தரப்பினர் சுடுகாட்டிற்கு சடலத்தினை கொண்டு செல்வதாக கூறி மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் நேற்று இரவு துரைசாமி (வயது 60) உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். கோயில் பூசாரியான அவரை சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற போது, இன்று மாற்று சமூகத்தினர் தங்கள் பகுதியின் வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று காவல்துறையினரிடம் புகார் அளித்ததோடு, போலீஸார் மாற்றுப்பாதையின் வழியாக சடலத்தினை எடுத்து செல்ல அனுமதி அளித்தனர். ஆண்டாண்டு காலமாக, தாங்கள் இந்த வழியாக தான் சுடுகாட்டிற்கு இறந்தவர் உடலை எடுத்து செல்வது வழக்கம் என்ற நிலையில், தற்போது மாற்றுப்பாதையில் எடுத்து செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாது என்று கோரி, இறந்த துரைசாமியின் சடலத்தினை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு குளித்தலை காவல்துறை கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையில், அதிவிரைவுப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.