தமிழ்நாடு அரசு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நெகிழிப் பொருட்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இதனையடுத்து நெகிழியின் உபயோகம் பல இடங்களில் குறைந்தது. இது தொடர்பாக இன்று வணிகர்களுக்கு நெகிழிப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.
பெரிய வர்த்தக கடைகளில் நெகிழியின் பயன்பாடுகள் தற்பொழுது குறைந்துள்ளது. ஆனால், நடுத்தர வர்த்தக வியாபாரிகளிடம் அதிகமாக காணப்படுவதால் அவர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் நகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.