ETV Bharat / state

கரூர் தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தயாரா..? - செந்தில் பாலாஜி சவால்

author img

By

Published : Mar 25, 2019, 11:06 PM IST

கரூர் : "கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா.." என்று தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையோட்டி, அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்புவிழா நடைபெற்றது. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, திமுக-வின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சென்ந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மத்திய அரசிடமிருந்து நிதிப்பெற்று செய்த நலத்திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாத்திக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

மேலும், மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, தன்னை மட்டுமே வளப்படுத்திக்கொண்டார். நான் அமைச்சராக இருந்தபோது கரூர் மாவட்டத்துக்கு செய்த நலத்திட்டங்களை தம்பிதுரை செய்ததாகப் பேசி வருகிறார். தம்பிதுரையின் கடைசி தேர்தலாக இது இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நிச்சயம் நாடாளுமன்றம் செல்வார். தேர்தலில் வெல்வதற்கு, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகின்றனர். மக்களை விலைக்கு வாங்கி வெற்றிபெற்று விடலாம் என மனக்கோட்டை கட்டுபவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையோட்டி, அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்புவிழா நடைபெற்றது. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, திமுக-வின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சென்ந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மத்திய அரசிடமிருந்து நிதிப்பெற்று செய்த நலத்திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாத்திக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

மேலும், மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, தன்னை மட்டுமே வளப்படுத்திக்கொண்டார். நான் அமைச்சராக இருந்தபோது கரூர் மாவட்டத்துக்கு செய்த நலத்திட்டங்களை தம்பிதுரை செய்ததாகப் பேசி வருகிறார். தம்பிதுரையின் கடைசி தேர்தலாக இது இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நிச்சயம் நாடாளுமன்றம் செல்வார். தேர்தலில் வெல்வதற்கு, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகின்றனர். மக்களை விலைக்கு வாங்கி வெற்றிபெற்று விடலாம் என மனக்கோட்டை கட்டுபவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனத் தெரிவித்தார்.

Intro:பிரசவம் பார்ப்பார் ஒருத்தர் பிள்ளையை உரிமை கொண்டாடுவர் ஒருத்தர் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி


Body:கரூர் மாவட்டம் கரூர் பாராளுமன்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கணிப்பு.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தை கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இந்திய ஜனநாயக கட்சி மனிதநேய மக்கள் கட்சி சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா கரூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வி ஜோதிமணி திராவிட முன்னேற்ற கழக கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் ஏனைய கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தம்பிதுரை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் என்ன என்ன செய்தார் என்பதை பட்டியலிட்டு கூறமுடியுமா ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம் தம்பிதுரை தயாரா என சவால் விடுத்தார்.

மக்களவை துணை சபாநாயகராக பதவி வகித்த தம்பிதுரை தன்னை வளப்படுத்திக் கொண்டார் தான் சார்ந்த கல்வி நிறுவனங்களை பாதுகாத்துக் கொண்டார் அனேகமாக தம்பிதுரை போட்டி இடும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் மத்தியில் ராகுல் காந்தி ஆட்சியில் அமையும்.

மேலும் நான் கொண்டுவந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் அவர் தனக்கு சொந்தமாக உரித்தாக்கிக் கொண்டார் மருத்துவக்கல்லூரி திட்டம் குகைவழி பாலம் வேலாயுதம்பாளையத்தில் தலைமை இடமாக கொண்டு புஞ்சை புகலூர் தாலுகாவை உருவாக்க முன்னெடுத்தது நான்தான் தேர்தல் நேரத்தில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மேலும் இது அனைத்தும் நான் அமைச்சராக இருந்த காலங்களில் கணவருக்கு வழங்கிய திட்டங்கள் இதனை நகைச்சுவையாக பிரச்சனை பார்த்தவர் ஒருவர் பிள்ளையைக் உரிமை கொண்டாடுவர் ஒருத்தர் என்றார்.

மேலும் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தம்பித்துரை தீர்மானித்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் வேட்டி சேலை வாங்குவதற்கு ஜவுளி கடைக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார் என்றும் கூறினார்.

மேலும் மனு தாக்கலின் போது மிகுந்த காலதாமதமும் நேர தாமதமும் எங்களை ஆக்கிவிட்டனர் இதற்கு காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறார்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.