ETV Bharat / state

'காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்துங்கள்'- நிறைவேறுமா நல்லாசிரியரின் கோரிக்கை!

author img

By

Published : Sep 5, 2020, 10:10 PM IST

Updated : Sep 6, 2020, 9:50 AM IST

கரூர்: காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்துங்கள் என நல்லாசிரியர் திலகவதி பயிற்றுவிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview

கரூர் மாவட்டம் தான்தோன்றி ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது கடந்த 1984ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக உருவெடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
மிகவும் தொன்மையான கட்டடமாக இருந்தாலும், அதனை பேணிக்காத்து தூய்மையாக பராமரித்து வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் திடக்கழிவு திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இப்பள்ளியை சாரும்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

இப்பள்ளியில் 10 ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர், கூடுதல் சிறப்பாக 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கென சிறப்பு பெற்ற ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இதில் ஐந்து மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
பள்ளி மாணவியருடன் ஆசிரியை திலகவதி

அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி என அனைத்தையும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில கல்வி முறைகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆங்கில மொழி பயிற்சி, ஓவியம், நடனம், தையல், யோகா மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என கல்வியைத் தாண்டி பல திறமைகள் மாணவர்களுக்கு புகட்டுகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியை தான் திலகவதி. ஆம் இவர்தான் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
வகுப்பறையில் ஆசிரியை திலகவதி
கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திலுள்ள காந்திகிராமம் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கல்விப் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை தாண்டி, தனித் திறமையை வளர்த்தார்.
குறிப்பாக பெண்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு போன்ற பல்வேறு திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இயற்கை வழியில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இதுவரை கரூரில் 6700 மரங்களை தத்து கொடுக்கிறோம் என்ற திட்டத்தின் கீழ் நட்டு பொது மக்களை வைத்து பராமரித்து வருகின்றார்.
காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
நல்லாசிரியர் விருது

இவரின் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
மாநில விருது என்பது எப்பொழுதும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் வழங்குவது வழக்கம். ஆனால் பரவிவரும் கரோனா வைரஸ் காலம் என்பதால் தமிழ்நாடு அரசு அளித்துள்ள உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நல்லாசிரியை விருதுபெற்ற ஆசிரியை திலகவதி பேட்டி

இதனை தான் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் என்னுடன் பள்ளியில் படித்த குழந்தைகள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதில் எனது உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.

தலைமையாசிரியை பூங்கொடி
தலைமையாசிரியை பூங்கொடி கூறுகையில், செஞ்சிலுவை சங்கத்தில் (JRC) உறுப்பினராக ஆசிரியை திலகவதி இருந்திருக்கிறார். இதன்மூலம் வாரந்தோறும் ஒரு செயல்பாடு திட்டத்தை பள்ளி- மாணவ மாணவிகளுக்கு வழங்கி வருகிறார். பள்ளிக்கு நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற திட்டங்களையும் செய்துள்ளார்” என்றார்.

பள்ளி மாணவி சந்திரமதி கூறுகையில், “நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை, குழந்தைகளின் தனித்திறமைகள் முக்கியத்துவம் அளித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார்.

பள்ளி மாணவி சந்திரமதி

இதுவரை பள்ளியில் பல மாணவர்கள் அழைத்து சென்று விருது பெற்று இருக்கிறார். திலகவதி ஆசிரியை தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். உண்மையில் இவரை அயன் உமன் (இரும்பு பெண்மணி) என அழைக்கலாம்” என்றார்.

மாணவரின் பெற்றோர் சந்துரு
பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் சந்துரு கூறுகையில், “நல்லாசிரியர் விருது என்பது ஒரு ஆசிரியருக்கு கிடைப்பது எளிது அல்ல, குழந்தைகளை நல் வழி நடத்தி அவர்களது பங்களிப்பை இருப்பதால் இருந்தால் மட்டுமே இந்த விருது கிடைக்கும், இந்த விருது என்பது பள்ளிக்கான விருது” எனத் தெரிவித்தார்.
திலகவதி பயிற்றுவிக்கும் பள்ளியின் சக ஆசிரியையான தமிழ்ச்செல்வி கூறுகையில், “இப்பள்ளியில் ஆசிரியை திலகவதி நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது பள்ளிக்குக் கிடைத்த வெற்றி.
ஆசிரியை தமிழ் செல்வி

இந்தப் பள்ளி தற்பொழுது நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக இதனை கருத்தில்கொண்டு இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதுவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பம்” என்றார்.

ஆசிரியை திலகவதி சமூகப்பணி, கல்வி பணி மற்றும் கலை போன்ற பல்வேறு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோரும் விருதுகள் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கற்பித்தலில் புதுமை: எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!

கரூர் மாவட்டம் தான்தோன்றி ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது கடந்த 1984ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக உருவெடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
மிகவும் தொன்மையான கட்டடமாக இருந்தாலும், அதனை பேணிக்காத்து தூய்மையாக பராமரித்து வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் திடக்கழிவு திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இப்பள்ளியை சாரும்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

இப்பள்ளியில் 10 ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர், கூடுதல் சிறப்பாக 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கென சிறப்பு பெற்ற ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இதில் ஐந்து மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
பள்ளி மாணவியருடன் ஆசிரியை திலகவதி

அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி என அனைத்தையும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில கல்வி முறைகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆங்கில மொழி பயிற்சி, ஓவியம், நடனம், தையல், யோகா மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என கல்வியைத் தாண்டி பல திறமைகள் மாணவர்களுக்கு புகட்டுகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியை தான் திலகவதி. ஆம் இவர்தான் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்.

காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
வகுப்பறையில் ஆசிரியை திலகவதி
கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திலுள்ள காந்திகிராமம் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கல்விப் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை தாண்டி, தனித் திறமையை வளர்த்தார்.
குறிப்பாக பெண்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு போன்ற பல்வேறு திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இயற்கை வழியில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இதுவரை கரூரில் 6700 மரங்களை தத்து கொடுக்கிறோம் என்ற திட்டத்தின் கீழ் நட்டு பொது மக்களை வைத்து பராமரித்து வருகின்றார்.
காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நல்லாசிரியர் திலகவதி ஆசிரியர் தினம் 2020 ஆசிரியர் தினம் ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆசிரியர் தின ஸ்பெஷல் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் Gandhi graman panchayat middle school Teacher Tilagavathy Karur Teachers day Teachers day 2020 Teacher day celebration Teachers day special Importance of teachers day shikshak divas National Teachers day sarvepalli radhakrishnan birth anniversary Teachers day in india Dr.Radhakrishnan awardee Teacher Thilagavathy special Interview
நல்லாசிரியர் விருது

இவரின் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
மாநில விருது என்பது எப்பொழுதும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் வழங்குவது வழக்கம். ஆனால் பரவிவரும் கரோனா வைரஸ் காலம் என்பதால் தமிழ்நாடு அரசு அளித்துள்ள உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நல்லாசிரியை விருதுபெற்ற ஆசிரியை திலகவதி பேட்டி

இதனை தான் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் என்னுடன் பள்ளியில் படித்த குழந்தைகள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதில் எனது உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.

தலைமையாசிரியை பூங்கொடி
தலைமையாசிரியை பூங்கொடி கூறுகையில், செஞ்சிலுவை சங்கத்தில் (JRC) உறுப்பினராக ஆசிரியை திலகவதி இருந்திருக்கிறார். இதன்மூலம் வாரந்தோறும் ஒரு செயல்பாடு திட்டத்தை பள்ளி- மாணவ மாணவிகளுக்கு வழங்கி வருகிறார். பள்ளிக்கு நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற திட்டங்களையும் செய்துள்ளார்” என்றார்.

பள்ளி மாணவி சந்திரமதி கூறுகையில், “நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை, குழந்தைகளின் தனித்திறமைகள் முக்கியத்துவம் அளித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார்.

பள்ளி மாணவி சந்திரமதி

இதுவரை பள்ளியில் பல மாணவர்கள் அழைத்து சென்று விருது பெற்று இருக்கிறார். திலகவதி ஆசிரியை தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். உண்மையில் இவரை அயன் உமன் (இரும்பு பெண்மணி) என அழைக்கலாம்” என்றார்.

மாணவரின் பெற்றோர் சந்துரு
பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் சந்துரு கூறுகையில், “நல்லாசிரியர் விருது என்பது ஒரு ஆசிரியருக்கு கிடைப்பது எளிது அல்ல, குழந்தைகளை நல் வழி நடத்தி அவர்களது பங்களிப்பை இருப்பதால் இருந்தால் மட்டுமே இந்த விருது கிடைக்கும், இந்த விருது என்பது பள்ளிக்கான விருது” எனத் தெரிவித்தார்.
திலகவதி பயிற்றுவிக்கும் பள்ளியின் சக ஆசிரியையான தமிழ்ச்செல்வி கூறுகையில், “இப்பள்ளியில் ஆசிரியை திலகவதி நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது பள்ளிக்குக் கிடைத்த வெற்றி.
ஆசிரியை தமிழ் செல்வி

இந்தப் பள்ளி தற்பொழுது நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக இதனை கருத்தில்கொண்டு இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதுவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பம்” என்றார்.

ஆசிரியை திலகவதி சமூகப்பணி, கல்வி பணி மற்றும் கலை போன்ற பல்வேறு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோரும் விருதுகள் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கற்பித்தலில் புதுமை: எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!

Last Updated : Sep 6, 2020, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.