ETV Bharat / state

கரூர் சாயப்பட்டறையில் பயங்கர தீ விபத்து!

author img

By

Published : Jan 5, 2023, 10:16 AM IST

கரூர் அருகே கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சாயப்பட்டறையில் பயங்கர தீ விபத்து
சாயப்பட்டறையில் பயங்கர தீ விபத்து
சாயப்பட்டறையில் பயங்கர தீ விபத்து

கரூர்: கருங்கம்பாளையம் அருகே ஆசியன் சாயப்பட்டறை நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று (ஜன.4) மாலை சுமார் 6 மணி அளவில், நிறுவனத்தில் நிலக்கரி வைத்திருக்கும் இடம் திடீரென புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி!

சாயப்பட்டறையில் பயங்கர தீ விபத்து

கரூர்: கருங்கம்பாளையம் அருகே ஆசியன் சாயப்பட்டறை நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று (ஜன.4) மாலை சுமார் 6 மணி அளவில், நிறுவனத்தில் நிலக்கரி வைத்திருக்கும் இடம் திடீரென புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.