ETV Bharat / state

'சாலை வசதி செய்துதரவில்லை' - கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு! - election boycott villagers

கரூர்: சாலை வசதி செய்துதரக்கோரி 364 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் கறுப்புக் கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்தனர்.

election boycott villagers
election boycott villagers
author img

By

Published : Dec 31, 2019, 9:45 AM IST

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய நான்கு ஊராட்சிகளில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கரூர் மாவட்டம் அழகாபுரியில் நீண்ட நாள்களாக சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அழகாபுரியிலிருந்து ஒத்தப்பட்டி செல்லும் இரண்டரை கிலோமீட்டர் சாலையை, தேர்தல் முடிந்த பின்பு செய்து தரப்படும் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் மக்களவைத் தேர்தல் முடிந்து எட்டு மாதங்களாகியும் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அப்பகுதியில் வசிக்கும் 364 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் - பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவல்துறையினர்!

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய நான்கு ஊராட்சிகளில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கரூர் மாவட்டம் அழகாபுரியில் நீண்ட நாள்களாக சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அழகாபுரியிலிருந்து ஒத்தப்பட்டி செல்லும் இரண்டரை கிலோமீட்டர் சாலையை, தேர்தல் முடிந்த பின்பு செய்து தரப்படும் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் மக்களவைத் தேர்தல் முடிந்து எட்டு மாதங்களாகியும் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அப்பகுதியில் வசிக்கும் 364 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் - பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவல்துறையினர்!

Intro:கருப்புக்கொடி காட்டி தேர்தல் புறக்கணிப்பு Body:கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாலை வசதி செய்து தராததை கண்டித்து பஞ்சபட்டி ஊராட்சி ஒத்தப்பட்டி வார்டில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உட்பட 364 வாக்காளர்கள் கருப்புக்கொடி காட்டி தேர்தல் புறக்கணிப்பு பரபரப்பு.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் குளித்தலை கடவூர் தோகைமலை ஆகிய நான்கு ஊராட்சிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சப்பட்டி ஊராட்சி வார்டு எண் 8-இல் அழகாபுரி ஒத்தப்பட்டி ரங்க பாளையம் ஆகிய மூன்று கிராமங்கள் இருக்கின்றன இதில் அழகாபுரியில் இருந்து புறப்பட்டு செல்லும் இரண்டரை கிலோ மீட்டர் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறது

அழகாபுரி மற்றும் ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு அழகாபுரி பாதையைத் தான் பயன்படுத்த வேண்டும்

சாலை வசதி செய்து தரக்கோரி இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்


கடந்த பாராளுமன்ற தேர்தலில் அழகாபுரியில் இருந்து ஒத்தப்பட்டி செல்லும் இரண்டரை கிலோ மீட்டர் சாலை தேர்தல் முடிந்த பின்பு செய்து தரப்படும் என்று அரசியல் கட்சியினரும் அதிகாரிகளும் வாக்குறுதி அளித்தனர் உறுதியளித்தனர்

ஆனால் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 8 மாதங்களாகியும் சாலை வசதி செய்து தரபடவில்லை.


இதனால் இப்பகுதியில் வசிக்கும் 364 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யாமல் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மேலும் எட்டாவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் சேகர் மற்றும் லட்சுமி ஆகிய இரு வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் பொது மக்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை அதிகாரிகள் யாரும் இப்பகுதி வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.