ETV Bharat / state

Sexual harassment: விதவை பெண் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைது

விதவை பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச காணொலி (Sexual harassment) அனுப்பிய இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

author img

By

Published : Nov 21, 2021, 9:00 AM IST

Sexual harassment
Sexual harassment

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே விதவைப் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் இவருக்கு வேறொரு அலைபேசி எண்ணிலிருந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual harassment) அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனை சந்தித்து புகாரளித்துள்ளார்.

அவரது உத்தரவின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் ரீத்தாபுரம் ஈத்தம்பாட்டைச் சேர்ந்த சதீஷ்(27), இரு வேறு அலைபேசி எண்கள் மூலம், ஆபாச காணொலிகளை அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, இதே விதவைப் பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக, சதீஷ் காவல்துறையினரால் கண்டிக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: Karur Sexual Harassment: 'கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்' - மாணவியின் உருக்கமான கடிதம்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே விதவைப் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் இவருக்கு வேறொரு அலைபேசி எண்ணிலிருந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual harassment) அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனை சந்தித்து புகாரளித்துள்ளார்.

அவரது உத்தரவின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் ரீத்தாபுரம் ஈத்தம்பாட்டைச் சேர்ந்த சதீஷ்(27), இரு வேறு அலைபேசி எண்கள் மூலம், ஆபாச காணொலிகளை அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, இதே விதவைப் பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக, சதீஷ் காவல்துறையினரால் கண்டிக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: Karur Sexual Harassment: 'கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்' - மாணவியின் உருக்கமான கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.