கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேவுள்ள வில்லவிளையைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் அபிஷேக் (19). இவர், இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் ஆரல்வாய்மொழியில் இருந்து தோவாளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெருமாள்புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தேங்காய் பாரம் ஏற்றி வந்த டெம்போ ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டெம்போ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவியில் பதிவான பைக் மீது லாரி மோதும் அதிர்ச்சி வீடியோ!