ETV Bharat / state

கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

author img

By

Published : Dec 4, 2020, 2:48 PM IST

கன்னியாகுமரி: தக்கலை அருகே கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது
கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள மருந்துக்கோட்டை பகுதியில் தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரசல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் இன்று (டிச.04) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த சேது (19), சுபின் (19) என்பது தெரியவந்தது.

மேலும், நண்பர்களான இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள மருந்துக்கோட்டை பகுதியில் தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரசல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் இன்று (டிச.04) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த சேது (19), சுபின் (19) என்பது தெரியவந்தது.

மேலும், நண்பர்களான இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.