ETV Bharat / state

கப்பல் விபத்தில் மாயமானவர்களைத் தொடர்ந்து தேடும்படி உத்தரவிட்டது உயர் நீதிமன்றக்கிளை

author img

By

Published : Nov 8, 2019, 10:11 PM IST

மதுரை: ரஷ்ய கடல் எல்லையில் தனியார் கப்பலில் நடந்த விபத்தில் மாயமான 2 தமிழர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, தஞ்சாவூரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து ரஷியாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி கேஸ்களை ஏற்றி சென்றிருந்தனர்.

அப்போது ஜனவரி 21ஆம் தேதி ரஷியா அருகே சென்ற கப்பலில் எல்.பி.ஜி கேஸ் கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பித்துள்ளனர். ஆனால், கப்பலில் இருந்த தமிழர்கள் 2 பேரின் நிலைமட்டும் என்னவென்று தெரியவில்லை, இதனால் அவர்களை மீட்கக்கோரி சகாயம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காணமல்போன இருவர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்றும்; அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காணாமல் போனவர்களை தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, தஞ்சாவூரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து ரஷியாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி கேஸ்களை ஏற்றி சென்றிருந்தனர்.

அப்போது ஜனவரி 21ஆம் தேதி ரஷியா அருகே சென்ற கப்பலில் எல்.பி.ஜி கேஸ் கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பித்துள்ளனர். ஆனால், கப்பலில் இருந்த தமிழர்கள் 2 பேரின் நிலைமட்டும் என்னவென்று தெரியவில்லை, இதனால் அவர்களை மீட்கக்கோரி சகாயம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காணமல்போன இருவர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்றும்; அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காணாமல் போனவர்களை தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Intro:ரஷ்ய கடல் எல்லையில் தனியார் கப்பலில் நடந்த விபத்தில் மாயமான இந்தியர்கள் இரண்டு பேரை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் சம்பத்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்,அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:ரஷ்ய கடல் எல்லையில் தனியார் கப்பலில் நடந்த விபத்தில் மாயமான இந்தியர்கள் இரண்டு பேரை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் சம்பத்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்,அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கன்னியாகுமரியை சேர்ந்த சகாய உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, தஞ்சாவூரை சேர்ந்த அவினாஷ் ஆகியோரை இந்தியவில் இருந்து ரஷியாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி கேஸ்களை ஏற்றி சென்றனர்,அப்போது கடந்த 2019 ஜனவரி 21ம் தேதி ரஷியா அருகே சென்ற போது எல்.பி. ஜி கேஸ் கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பித்தனர். அதில் இந்தியர்கள் 2 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை, அவர்களை மீட்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்,அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும்.மேலும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் காணாமல் போனவர்களை தேடும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.