ETV Bharat / state

குமரியில் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பலர் படுகாயம்!

author img

By

Published : Jan 6, 2020, 5:07 PM IST

குமரி: ராஜாக்கமங்கலம் அருகே சூரபள்ளதில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

acc
விபத்து

குமரி மாவட்டத்தில் இயங்கும் அருணாசலம் மகளிர் பொறியியல் கல்லூரி பேருந்தும், ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி பேருந்தும் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு வந்த போது, சூரபள்ளதில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்துகளுமே அதிவேகமாக வந்த போது விபத்து ஏற்பட்டது எனத் தெரிய வந்தது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் ரூ.2 கோடி வரை மோசடி: ஆயுதப்படை காவலர் கைது!

குமரி மாவட்டத்தில் இயங்கும் அருணாசலம் மகளிர் பொறியியல் கல்லூரி பேருந்தும், ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி பேருந்தும் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு வந்த போது, சூரபள்ளதில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்துகளுமே அதிவேகமாக வந்த போது விபத்து ஏற்பட்டது எனத் தெரிய வந்தது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் ரூ.2 கோடி வரை மோசடி: ஆயுதப்படை காவலர் கைது!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ராஜாக்கமங்களம் அருகே சூரபள்ளதில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. இதில் காயமடைந்த மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி. ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Body:தமிழகம் முழுவதும் விடுமுறைகள் முடிவடைந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கபட்டன. இந்நிலையில் வெள்ளமடியில் உள்ள அருணாசலம் மகளிர் பொறியியல் கல்லூரி பேருந்தும், அழிக்கால் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி பேருந்தும் பல்வேறு இடங்களில் மாணவ மனைவியர்களை ஏற்றி கொண்டு கல்லூரிக்கு வந்த போது, ராஜாக்கமங்கலம் அருகே சூரபள்ளதில் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இரு பேருந்துகளிலும் இருந்தும் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் காயம் அடைந்து கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிற்சைகாக அனுமதிக்கபட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்துகளுமே அதிவேகமாக வந்த போது விபத்து ஏற்பட்டது என தெரியவந்து உள்ளது. Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.