குமரி மாவட்டத்தில் இயங்கும் அருணாசலம் மகளிர் பொறியியல் கல்லூரி பேருந்தும், ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி பேருந்தும் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு வந்த போது, சூரபள்ளதில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்துகளுமே அதிவேகமாக வந்த போது விபத்து ஏற்பட்டது எனத் தெரிய வந்தது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் ரூ.2 கோடி வரை மோசடி: ஆயுதப்படை காவலர் கைது!