பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
குமரி மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய வணிக நிறுவனங்களிலுள்ள கோட்டாறு, மார்த்தாண்டம் ஆகிய பகுதியிலுள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. வியாபாரிகள் கடைகளை அடைத்து மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளித்தனர்.
புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களுக்குத் தடை!
நகரத்தில் முக்கியப் பகுதிகளான மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் முக்கியப் பேருந்து நிலையங்களான வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் ஆகியவையும் ஆள் அரவாரமின்றி காணப்பட்டன. பல இடங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.