ETV Bharat / state

குடிபோதையில் இருந்த தந்தைக்கு பயந்து தோட்டத்தில் பதுங்கிய குழந்தை; பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்

author img

By

Published : Jun 15, 2022, 1:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்காடு பாலவிளை பகுதியில் குடிபோதையில் இருந்த தந்தைக்கு பயந்து ரப்பர் தோட்டத்தில் ஓளிந்து கொண்ட குழந்தை, விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது

பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்
பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்

கன்னியாகுமரி: குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை சேர்ந்தவர் சுரேந்தின். கூலி தொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும் , சுஷ்வின் சிஜோ (12 வயது) , சுஜிலின் ஜோ (9 வயது), சுஷ்விகா மோள் (4 வயது) என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.
மதுவுக்கு அடிமையான சுரேந்திரன் தினமும் குடித்து விட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை அடிப்பதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சுரேந்திரன் அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி குழந்தைகளை அடிக்க முயன்றுள்ளார். பயத்தில் பிள்ளைகள் சுஷ்விகா மோள், சுஷ்வின்சுஜோ, சுஜிலின் ஜோ ஆகியோர் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஓடி சென்று பதுங்கியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விகா மோளை விஷப்பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தை சுஷ்விகா மோளை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 4 வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அரைநிர்வாணமாக அட்டகாசம் செய்த போதை ஆசாமிகள்

கன்னியாகுமரி: குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை சேர்ந்தவர் சுரேந்தின். கூலி தொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும் , சுஷ்வின் சிஜோ (12 வயது) , சுஜிலின் ஜோ (9 வயது), சுஷ்விகா மோள் (4 வயது) என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.
மதுவுக்கு அடிமையான சுரேந்திரன் தினமும் குடித்து விட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை அடிப்பதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சுரேந்திரன் அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி குழந்தைகளை அடிக்க முயன்றுள்ளார். பயத்தில் பிள்ளைகள் சுஷ்விகா மோள், சுஷ்வின்சுஜோ, சுஜிலின் ஜோ ஆகியோர் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஓடி சென்று பதுங்கியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விகா மோளை விஷப்பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தை சுஷ்விகா மோளை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 4 வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அரைநிர்வாணமாக அட்டகாசம் செய்த போதை ஆசாமிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.