ETV Bharat / state

தாய்க்கு 2ஆவது திருமணம்... 13வயது மகளை கர்ப்பமாக்கிய தாயின் கணவர்! - இரணியலில் 13வயது பள்ளி மாணவி கர்ப்பம்

கன்னியாகுமரி: இரணியலில் 13 வயது பள்ளி மாணவியின் கர்ப்பத்துக்குக் காரணமான, தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாணவியை கர்ப்பமாக்கிய சசிக்குமார்(40)
author img

By

Published : Sep 11, 2019, 2:08 PM IST

குமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா. கணவரை இழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வறுமையில் வாடி வந்தார் சாந்தா.

இந்நிலையில் பக்கத்து ஊரான புதுவிளைப் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (40) என்பவருடன் சாந்தாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சாந்தா வீட்டிலேயே தங்கி கேரளாவிற்கு கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாந்தாவை முறைப்படி திருமணம் செய்த சசிக்குமார், சாந்தா, பெண் குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்த சாந்தாவின் 13 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல் நலம் குன்ற ஆரம்பித்ததால், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உடல் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

குளச்சல் மகளிர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தனது தாயாரின் இரண்டாவது கணவரான சசிக்குமார், கேரளாவிலிருந்து வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வருவதாகவும், வீட்டிற்கு வந்தஉடன் தாயார் சாந்தாவிடம் பணத்தைக் கொடுத்து கடைக்குப் பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு, தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனாலேயே மாணவி கர்ப்பம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சசிக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சசிக்குமாரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். மாணவிக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வறுமையைப் பயன்படுத்தி விதவையை இரண்டாவது திருமணம் செய்த சசிக்குமார், அவரது 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா. கணவரை இழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வறுமையில் வாடி வந்தார் சாந்தா.

இந்நிலையில் பக்கத்து ஊரான புதுவிளைப் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (40) என்பவருடன் சாந்தாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சாந்தா வீட்டிலேயே தங்கி கேரளாவிற்கு கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாந்தாவை முறைப்படி திருமணம் செய்த சசிக்குமார், சாந்தா, பெண் குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்த சாந்தாவின் 13 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல் நலம் குன்ற ஆரம்பித்ததால், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உடல் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

குளச்சல் மகளிர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தனது தாயாரின் இரண்டாவது கணவரான சசிக்குமார், கேரளாவிலிருந்து வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வருவதாகவும், வீட்டிற்கு வந்தஉடன் தாயார் சாந்தாவிடம் பணத்தைக் கொடுத்து கடைக்குப் பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு, தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனாலேயே மாணவி கர்ப்பம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சசிக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சசிக்குமாரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். மாணவிக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வறுமையைப் பயன்படுத்தி விதவையை இரண்டாவது திருமணம் செய்த சசிக்குமார், அவரது 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் இரணியலில் 13 வயதான 9-வகுப்பு மாணவி கர்ப்பம். கர்ப்பத்திற்கு காரணமான மாணவியின் தாயின் இரண்டாவது கணவர் கைது. தாயின் வறுமையை பயன்படுத்தி இரண்டாவது திருமணம் செய்து மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது அம்பலம்.Body:கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தோணி முத்து இறந்துவிட்டார்.
இதனை தொடர்ந்து சாந்தாவும் அவரது பெண் குழந்தையும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சாந்தாவின் உறவினர்கள் யாரும் உதவிக்கு முன்வராததால் தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு சாந்தா வறுமையில் வாடி வந்தார்.
இந்த நிலையில் பக்கத்து ஊரான புதுவிளை பகுதியை சேர்ந்த கேரளாவில் கொத்தனார் வேலை பார்க்கும் சசிக்குமார்(40) என்பவருடன் சாந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சாந்தா வீட்டிலேயே தங்கி கொத்தனர் வேலைக்கு கேரளாவிற்கு சென்று வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சாந்தாவை முறைப்படி திருமணம் செய்து சாந்தா மற்றும் அவரது பெண் குழந்தையுடனேயே சசிக்குமார் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், சாந்தாவின் 13 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலம் குன்ற ஆரம்பித்ததால் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள் இது குறித்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர். குளச்சல் மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கேரளாவிற்கு கொத்தனார் வேலைக்கு செல்லும் தனது தாயாரின் இரண்டாவது கணவரான சசிக்குமார் கேராளாவில் இருந்து வீட்டிற்கு வரும் போது குடிபோதையில் வருவதாகவும் வீட்டிற்கு வந்த உடன் தாயார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவம் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சசிக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சசிக்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர். மாணவிக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வறுமையை பயன்படுத்தி விதவையை இரண்டாவது திருமணம் செய்த சசிக்குமார் அவரது 13-வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.