ETV Bharat / state

இளம் தலைமுறையினர் தினசரி செய்தியை படித்தால் போதும் -சைலேந்திர பாபு

கன்னியாகுமரி: தினசரி செய்திகளைத் தொடர்ந்து படித்தாலே மொழி ஆளுமையை இளம் தலைமுறையினர் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

syelendra babu
author img

By

Published : Sep 10, 2019, 11:08 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் அமைந்துள்ள ரோகினி பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, 'கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வியை கொண்டு ஒருவன் உயர்ந்த பதவிகளை எட்ட முடியும் .எந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்தாலும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியை விரும்பிப் படிக்க வேண்டும். கல்வி தான் உலகத்தைச் சரியாக பார்க்க உதவும் ஆயுதம். மாணவர்கள் படிக்கும் போதே தன் துறை தவிர்த்து பிற துறைகளில் சிறந்த அறிஞர்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.

மாணவர்களிடம் உறையாற்றும் சைலேந்திரபாபு

எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி தான் கிடைக்கிறது. எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் உயர்ந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகின்றனர். நம்மில் பலருக்கு ஆங்கிலம் பற்றிய பயம் இருக்கிறது. உயர்ந்த பதவியை அடைய ஆங்கிலமோ, ஏழ்மையோ தடையில்லை. இளம் தலைமுறைக்கு பொறியியல் படிப்பின் அருமை தெரியவில்லை. அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன், பேரார்வம், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு பிறருக்கு உதவும் எண்ணம் ஆகியவற்றை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். எந்த துறையானாலும் முக்கியத் தகுதியாக கருதப்படும் மொழி ஆளுமையை பெற தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம். விடாமுயற்சி உழைப்பு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றியமையாதது என அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் அமைந்துள்ள ரோகினி பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, 'கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வியை கொண்டு ஒருவன் உயர்ந்த பதவிகளை எட்ட முடியும் .எந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்தாலும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியை விரும்பிப் படிக்க வேண்டும். கல்வி தான் உலகத்தைச் சரியாக பார்க்க உதவும் ஆயுதம். மாணவர்கள் படிக்கும் போதே தன் துறை தவிர்த்து பிற துறைகளில் சிறந்த அறிஞர்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.

மாணவர்களிடம் உறையாற்றும் சைலேந்திரபாபு

எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி தான் கிடைக்கிறது. எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் உயர்ந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகின்றனர். நம்மில் பலருக்கு ஆங்கிலம் பற்றிய பயம் இருக்கிறது. உயர்ந்த பதவியை அடைய ஆங்கிலமோ, ஏழ்மையோ தடையில்லை. இளம் தலைமுறைக்கு பொறியியல் படிப்பின் அருமை தெரியவில்லை. அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன், பேரார்வம், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு பிறருக்கு உதவும் எண்ணம் ஆகியவற்றை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். எந்த துறையானாலும் முக்கியத் தகுதியாக கருதப்படும் மொழி ஆளுமையை பெற தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம். விடாமுயற்சி உழைப்பு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றியமையாதது என அவர் தெரிவித்தார்.

Intro:தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே மொழி ஆளுமையை இளம் தலைமுறையினர் மேம்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.


Body:தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே மொழி ஆளுமையை இளம் தலைமுறையினர் மேம்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரோகினி பொறியியல் கல்லூரியில் நடந்த மாணவ மாணவிகளுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-
கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வியை கொண்டு ஒருவன் உயர்ந்த பதவிகளை எட்ட முடியும் .எந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்தாலும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியை விரும்பிப் படிக்க வேண்டும். கல்வி தான் உலகத்தை சரியாக பார்க்க உதவும் ஆயுதம். இன்ஜினியர்கள் இன்று உலகின் மிக உயர்ந்த பதவிகளிலும் இடம் வைக்கிறார்கள். மாணவர்கள் படிக்கும் போதே தன் துறை தவிர்த்து பிற துறைகளில் சிறந்த அறிஞர்களின் நூல்களையும் படிக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி தான் கிடைக்கிறது. அதை கொண்டு நாம் எந்த பதவி அடைகிறோம் என்பது தான் முக்கியம் அது தான் மதிப்புமிக்கது. எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் உயர்ந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இன்ஜினியரிங் துறையை சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகின்றனர். நம்மில் பலருக்கு ஆங்கிலம் பற்றிய பயம் இருக்கிறது. உயர்ந்த பதவியை அடைய ஆங்கிலமோ, ஏழ்மையை தடையில்லை. மாணவர்கள் தங்களின் கல்வியைக் கொண்டு உயர்ந்த பதவியை அடைய முடியும் .இளம் தலைமுறைக்கு இன்ஜினீயரிங் படிப்பின் அருமை தெரியவில்லை. அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் துறையில் மாறிவரும் முன்னேற்றத்துக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் பேரார்வம் தொடர்பு திறன் ஒத்துழைப்பு பிறருக்கு உதவும் எண்ணம் ஆகியவற்றை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். எந்த துறையானாலும் முக்கிய தகுதியாக கருதப்படும் மொழி ஆளுமையை பெற தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம் .விடாமுயற்சி உழைப்பு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பதிலளித்தார். பின்னர் பல்வேறு போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.