ETV Bharat / state

காவல்துறையின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த குமரி பொறியாளர்! - காவல் துறையின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

கன்னியாகுமரி: காவல்துறையின் முகநூல் பக்கத்தை முடக்கிய தக்கலையைச் சேர்ந்த பொறியாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

facebook hacked in kanyakumari
facebook hacked in kanyakumari
author img

By

Published : Dec 5, 2019, 3:02 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்றச் சம்பவ நிகழ்வுகளை பதிவு செய்யவும், மோசடி கும்பல்கள் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த முகநூல் பக்கமானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் மூலம் பதிவேற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகநூல் பக்கத்தில் சில நாட்களாகவே, காவல் துறை குறித்தும் காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இச்சூழலில் ஒரு வாரத்திற்கு முன் இந்த முகநூல் பக்கமும் முடக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையைச் சேர்ந்த கணினி வல்லுனர்கள், அம்முகநூல் பக்கத்தை மீட்டெடுத்து ஆராய்ந்த போது அந்த பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பக்கத்தை முடக்கியவர்கள் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி என்ற நான்கு நபர்கள் என்பது தெரியவந்தது.

கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மேலும் நான்கு பேரும் டிப்ளமோ பொறியியல் படித்து விட்டு, வெளிநாடுகளில் பணியாற்றுவதும், அங்கிருந்த இந்த செயலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தக்கலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குவைத்திலிருந்து நாடுதிரும்பிய பொறியாளர் ஜெரூனை கைதுசெய்தனர்.

மேலும் அவருக்கு உதவியாக இருந்த, வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது நண்பர்களான வினீஷ், பிரைட்சிங், மார்சியன் ஆன்றணியை ஆகியோரை இந்தியா வரும்போது கைது செய்ய ஏதுவாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்றச் சம்பவ நிகழ்வுகளை பதிவு செய்யவும், மோசடி கும்பல்கள் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த முகநூல் பக்கமானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் மூலம் பதிவேற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகநூல் பக்கத்தில் சில நாட்களாகவே, காவல் துறை குறித்தும் காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இச்சூழலில் ஒரு வாரத்திற்கு முன் இந்த முகநூல் பக்கமும் முடக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையைச் சேர்ந்த கணினி வல்லுனர்கள், அம்முகநூல் பக்கத்தை மீட்டெடுத்து ஆராய்ந்த போது அந்த பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பக்கத்தை முடக்கியவர்கள் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி என்ற நான்கு நபர்கள் என்பது தெரியவந்தது.

கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மேலும் நான்கு பேரும் டிப்ளமோ பொறியியல் படித்து விட்டு, வெளிநாடுகளில் பணியாற்றுவதும், அங்கிருந்த இந்த செயலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தக்கலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குவைத்திலிருந்து நாடுதிரும்பிய பொறியாளர் ஜெரூனை கைதுசெய்தனர்.

மேலும் அவருக்கு உதவியாக இருந்த, வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது நண்பர்களான வினீஷ், பிரைட்சிங், மார்சியன் ஆன்றணியை ஆகியோரை இந்தியா வரும்போது கைது செய்ய ஏதுவாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட காவல் துறை முகநூல் பக்கத்தில் காவலர்கள் குறித்து வெளிநாட்டில் இருந்து அவதூறு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு, காவல்துறையின் முகநூல் பக்கத்தை முடக்கிய தக்கலையை சேர்ந்த பொறியாளர் கைது. மேலும் மூன்று பேர் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போது கைது செய்ய விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவ நிகழ்வுகளை பதிவு செய்யவும், மோசடி கும்பல்கள் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் Kanyakumari district police என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது.
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் மூலம் பதிவுகள் பதிவேற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே சிலர் காவல் துறை குறித்தும் காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த முகநூல் பக்கமும் முடக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையை சேர்ந்த கணினி வல்லுனர்கள் அந்த முகநூல் பக்கத்தை மீட்டெடுத்து ஆராய்ந்த போது அந்த பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பக்கத்தை முடக்கியவர்கள் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி என்ற நான்கு நபர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் நான்கு பேரும் டிப்ளமோ பொறியியல் படித்து விட்டு வெளிநாடுகளில் பணியாற்றுவதும், அங்கிருந்த இந்த செயலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, குவைத்திலிருந்து நாடு திரும்பிய பொறியாளர் ஜெரூன்-ஐ கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த, வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது நண்பர்கள் வினீஷ், பிரைட்சிங் மற்றும் மார்சியன் ஆன்றணியை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போது கைது செய்ய ஏதுவாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.