ETV Bharat / state

கன்னியாகுமரியில் கஞ்சா விற்றவர் கைது!

author img

By

Published : Nov 4, 2020, 9:32 PM IST

கன்னியாகுமரி: சுசீந்திரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கஞ்சா விற்பனை செய்தவர்
கஞ்சா விற்பனை செய்தவர்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் சரகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து சுசீந்திரம் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் இன்று (நவ. 04) கோட்டார் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேரைக்கால்புதூரை அடுத்த தண்டநாயக கோணம் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெற்றது தெரியவந்தது.

பிறகு காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்த அந்தோணி (49) என்பவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர். இதனையடுத்து அவர் சுசீந்திரம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் சரகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து சுசீந்திரம் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் இன்று (நவ. 04) கோட்டார் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேரைக்கால்புதூரை அடுத்த தண்டநாயக கோணம் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெற்றது தெரியவந்தது.

பிறகு காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்த அந்தோணி (49) என்பவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர். இதனையடுத்து அவர் சுசீந்திரம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.