ETV Bharat / state

பகவதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது!

நாகர்கோவில்: தமிழ்நாட்டின் பிரபலமான கோயில்களில் ஒன்றான பகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பகவதியம்மன் கோயில்
author img

By

Published : May 9, 2019, 3:52 PM IST

கன்னியாகுமரியில் பிரபலமான கோயிலான பகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருக்கொடியை மணலிகரை மடம் நம்பூதிரி சஜித் சங்கரநாராயணரூ ஏற்றிவைத்தார்.

முன்னதாக நேற்று இரவு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டாண்டு கால பாரம்பரியப்படி கொடி மர கயிற்றை கன்னியாகுமரி வாவுத்துறையைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கோயிலில் கொண்டு வந்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயவுரை, பக்தி இன்னிசை கச்சேரி, அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் பிரபலமான கோயிலான பகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருக்கொடியை மணலிகரை மடம் நம்பூதிரி சஜித் சங்கரநாராயணரூ ஏற்றிவைத்தார்.

முன்னதாக நேற்று இரவு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டாண்டு கால பாரம்பரியப்படி கொடி மர கயிற்றை கன்னியாகுமரி வாவுத்துறையைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கோயிலில் கொண்டு வந்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயவுரை, பக்தி இன்னிசை கச்சேரி, அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் செய்து வருகின்றனர்.

TN_KNK_01_09_PAKAVATHIAMMAN_KODIYETRAM_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாத விசாகபெருந் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திருக்கொடியை மணலிகரை மடம் நம்பூதிரி சஜித் சங்கரநாராயணரூ ஏற்றி வைத்தார். இந்நிகழச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக நேற்று இரவு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டாண்டு கால பாரம்பரியப்படி கொடி மர கயிற்றை கன்னியாகுமரி வாவுத்துறையை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கோவிலில் கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு அபிக்ஷேகம், அன்னதானம், சமயவுரை, பக்தி இன்னிசை கச்சேரி மற்றும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இத்திதிருவிழா 10 நாட்கள் நடைபெறுகின்றன விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், வாகனங்களில் அம்மன் வீதி உலா வருதல், அன்னதானம், சமய உரை, பக்தி பஜனை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.