கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜமாஆத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இமாம் பாதுஷா, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சமய நிகழ்வுகள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 25ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கயிருப்பதால் பள்ளிவாசலிலே நோன்பு கஞ்சி காய்ச்சி அனைத்து வீடுகளுக்கும் வாகனங்களின் மூலம் விநியோகம் செய்ய அரசு அனுமதி வழங்கிட கோரிக்கைவிடுத்துள்ளதாக கூறினார்
மேலும், மாநிலம் முழுவதும் தராவிஹ் எனப்படும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களுக்கே அரசை எதிர்பார்க்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மாதத்திற்கு ஏழாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் பார்க்க:கல்வியை ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அம்பேத்கர்: மு.க. ஸ்டாலின்!