கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் லட்சுமி என்ற பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் கிடைக்காமல், மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேபோல புத்தேரி பகுதியில் தோண்டப்பட்ட குடிநீர் குழாய் கிடங்கை சரியாக மூடாததால், அதில் விழுந்து இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
சமீபத்தில், பெய்த கனமழை காரணமாக 300 வீடுகள் இடிந்துள்ளன. மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் இழப்பை சந்தித்த குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக்கோரி பாமகவினர் மனு!