ETV Bharat / state

அலட்சிய சிகிச்சையால் குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார்!

author img

By

Published : Jul 2, 2019, 10:13 PM IST

கன்னியாகுமரி: மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை இறந்ததாகக் கூறி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி சபிதா. இவருக்கு கடந்த 27ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபிதாவை பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் சபிதாவிற்கு சுகபிரசவம் ஆகிவிடும் என செவிலியர்களிடன் கூறிவிட்டு மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து, சரியான முறையில் சிகிற்சை அளிக்காததால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு பிறந்த குழந்தை மூச்சு விட முடியாததால், சில மணி நேரத்தில் இறந்துள்ளது.

பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இந்நிலையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல், அலைக்கழித்ததால் குழந்தை இறந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபிதாவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி சபிதா. இவருக்கு கடந்த 27ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபிதாவை பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் சபிதாவிற்கு சுகபிரசவம் ஆகிவிடும் என செவிலியர்களிடன் கூறிவிட்டு மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து, சரியான முறையில் சிகிற்சை அளிக்காததால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு பிறந்த குழந்தை மூச்சு விட முடியாததால், சில மணி நேரத்தில் இறந்துள்ளது.

பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இந்நிலையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல், அலைக்கழித்ததால் குழந்தை இறந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபிதாவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததாக உறவினர்கள் புகார். குழந்தை இறப்பிற்கு காரணமான மருத்துவர், செவிலியர்கள் மற்றும் வார்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
Body:கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி சபிதா. இவருக்கு பிரசவம் சம்பந்தமாக சுருளகோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார்.
கடந்த 27 ஆம் தேதி பிரசவ வேதனை ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவர்கள சபிதாவை பூதப்பாண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இங்குள்ள பெண் மருத்துவர் அறுவை சிகிற்சை அவசியபடாது, சுக பிரசவம் ஆகிவிடும் என உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர், பிரசவ சிகிற்சையை கவனிக்காமல் இங்குள்ள செலவிலியர்களிடம் ஒப்டைத்து விட்டு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சரியான முறையில் சிகிற்சை அளிக்காததால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் குழந்தை மூச்சி விட முடியாத நிலையில் பிறத்தது. சில மணி நேரத்தில் இறந்தது. சபிதாவிற்கு தொடர்ந்து சிகிற்சை அளித்து வருகிறார்கள். உரிய நேரத்தில் பூதப்பாண்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்காததாலும், பெண் மருத்துவர் சிகிற்சை அளிக்க வராமல் செவலியர்களிடம் மகப்பேறு சிகிற்சையை ஒப்படைத்ததாலும் குழந்தை இறந்து விட்டாதாக கூறி சபிதாவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
குழந்தை இறப்பிற்கு காரணமான மருத்துவர், செவிலியர்கள் மற்றும் வார்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.