ETV Bharat / state

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன்; சந்தேகத்தால் மனைவி கொலை

author img

By

Published : Oct 21, 2022, 9:18 PM IST

நாகர்கோவிலில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் சந்தேகத்தால் மனைவி கொலை
வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் சந்தேகத்தால் மனைவி கொலை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள எட்டாமடை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (47). இவரது மனைவியின் பெயர் ஜெஸிகலா (37), இருவர்களுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜார்ஜ் தனது குடும்பத்துடன், நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார்.

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய ஜார்ஜுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் நள்ளிரவில், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஜெஸிகலாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன் ஜார்ஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை..

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள எட்டாமடை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (47). இவரது மனைவியின் பெயர் ஜெஸிகலா (37), இருவர்களுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜார்ஜ் தனது குடும்பத்துடன், நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார்.

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய ஜார்ஜுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் நள்ளிரவில், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஜெஸிகலாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன் ஜார்ஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.