ETV Bharat / state

குமரி கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

author img

By

Published : Dec 6, 2019, 3:28 PM IST

கன்னியாகுமரி: கடலோரப் பகுதிகளில் காலை முதல் பயங்கர சூறைக்காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அதிகளவிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

kanyakumari
kanyakumari

கன்னியாகுமரியில் இன்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து கீழே விழுந்தன. இந்த சூறைக்காற்றில் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல் துறையினருக்கான புறக்காவல் நிலையத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது காவலர்கள் யாரும் பணியில் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடல் சீற்றத்துடனும், சூறைக்காற்று காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதி

அதேபோல், 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்ந்து கடற்கரை பகுதிகளை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிரமாகக் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை மீனவர்கள்!

கன்னியாகுமரியில் இன்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து கீழே விழுந்தன. இந்த சூறைக்காற்றில் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல் துறையினருக்கான புறக்காவல் நிலையத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது காவலர்கள் யாரும் பணியில் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடல் சீற்றத்துடனும், சூறைக்காற்று காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதி

அதேபோல், 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்ந்து கடற்கரை பகுதிகளை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிரமாகக் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை மீனவர்கள்!

Intro:சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பயங்கர சூறை காற்று. ரவுண்டானா பகுதியில் இருந்த போலீஸ் பாதுகாப்பு கூடார கூரையை காற்று தூக்கி கொண்டு சென்றது.கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து.Body:tn_knk_01_kanyakumari_suraikatru_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பயங்கர சூறை காற்று. ரவுண்டானா பகுதியில் இருந்த போலீஸ் பாதுகாப்பு கூடார கூரையை காற்று தூக்கி கொண்டு சென்றது.கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து.

கன்னியாகுமரியில் இன்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன. இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வீசிய சூறைக்காற்றில் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்து மற்றும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்கும் புறக்காவல் நிலையத்தின் பாதுகாப்பு கூடாரத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் நின்ற போலீசார் டீ குடிக்க சென்றதால் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர். மேலும் கடல் வரலாறு காணாத சீற்றமாக இருப்பதாலும் சூறைக்காற்று காரணமாகவும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.முக்கடல் சங்கம் பகுதிகளில் கடலில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இறங்கி குளிக்கவும் விளையாடவும் தடை செய்யப்பட்டுள்ளது.சூறைக்காற்று காரணமாக ஆரோக்கியமும் முதல் மணக்குடி வரையிலான 500க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தொடர்ந்து கடற்கரை பகுதிகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.