ETV Bharat / state

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

author img

By

Published : Mar 15, 2021, 4:11 PM IST

கன்னியாகுமரி: வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. நச்சுப்புகையினால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

புகைமண்டலமான வலம்புரிவிளை
புகைமண்டலமான வலம்புரிவிளை

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகே சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வலம்புரிவிளை குப்பைக்கிடங்கு. இதில் எதிர்பாராதவிதமாக நேற்று (மார்ச் 14) தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் மலைபோல் குவிந்துகிடந்த குப்பைகள் கொளுந்துவிட்டு எரிய தொடங்கின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் பெரும் சிரத்தை எடுத்தனர்.

ஆனால் பலத்தக் காற்று, குப்பை மேட்டில் தீ மேலும் பரவ வழி வகுத்தது. சுட்டெரிக்கும் வெயில் நேரம் என்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்குச் சவாலாக அமைந்தது.

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து

தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்தன.

எனினும் குப்பை குவியலின் அடிப்பகுதியில் இருக்கும் தீக்கங்குகள் புகைச்சலை ஏற்படுத்தின. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளைக் கிளறிவிட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.

குப்பைக் கிடங்கில் ஒரு பகுதியில் தீயை அணைப்பதற்குள் வேறு பகுதிக்குத் தீ பரவியது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு, வெகுநேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர்.

புகைமண்டலமான வலம்புரிவிளை
புகை மண்டலமான வலம்புரிவிளை

தொடர்கதையாகி வரும் தீ விபத்து

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதியடைந்து-வருகின்றனர். இதனிடையே, இங்கு அவ்வப்போது தீ விபத்தும் ஏற்படுகிறது. குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள இந்தக் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் நேரத்தில் வந்து இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகே சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வலம்புரிவிளை குப்பைக்கிடங்கு. இதில் எதிர்பாராதவிதமாக நேற்று (மார்ச் 14) தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் மலைபோல் குவிந்துகிடந்த குப்பைகள் கொளுந்துவிட்டு எரிய தொடங்கின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் பெரும் சிரத்தை எடுத்தனர்.

ஆனால் பலத்தக் காற்று, குப்பை மேட்டில் தீ மேலும் பரவ வழி வகுத்தது. சுட்டெரிக்கும் வெயில் நேரம் என்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்குச் சவாலாக அமைந்தது.

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து

தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்தன.

எனினும் குப்பை குவியலின் அடிப்பகுதியில் இருக்கும் தீக்கங்குகள் புகைச்சலை ஏற்படுத்தின. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளைக் கிளறிவிட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.

குப்பைக் கிடங்கில் ஒரு பகுதியில் தீயை அணைப்பதற்குள் வேறு பகுதிக்குத் தீ பரவியது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு, வெகுநேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர்.

புகைமண்டலமான வலம்புரிவிளை
புகை மண்டலமான வலம்புரிவிளை

தொடர்கதையாகி வரும் தீ விபத்து

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதியடைந்து-வருகின்றனர். இதனிடையே, இங்கு அவ்வப்போது தீ விபத்தும் ஏற்படுகிறது. குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள இந்தக் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் நேரத்தில் வந்து இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.