தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் மொத்தம் 1,02,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 64,680 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னை மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 15 கர்ப்பிணிகள் உள்பட 298 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.