கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஆட்டோ ஓட்டுனர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:11:20:1597736480-tn-knk-02-auto-drivers-protest-visual-7203868-18082020123910-1808f-1597734550-933.jpg?imwidth=3840)
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: "ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட், சாலை வரி, உரிமம் புதுப்பிப்பதற்கான காலத்தை லாக் டவுன் முடியும் நாளில் இருந்து ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும்.
வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வாகன கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா காலத்தில் ஆட்டோக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: "ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட், சாலை வரி, உரிமம் புதுப்பிப்பதற்கான காலத்தை லாக் டவுன் முடியும் நாளில் இருந்து ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும்.
வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வாகன கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா காலத்தில் ஆட்டோக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்றனர்.