ETV Bharat / state

கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட முயன்ற 2 பேர் கைது

author img

By

Published : Mar 10, 2021, 10:27 PM IST

கன்னியாகுமரி: கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட முயன்ற இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் தலைமையிலான காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் (64), குமார் (74) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சுமார் 80 ஆயிரம் வரை புழக்கத்தில்விட வைத்திருந்தனர்.

இந்தக் கள்ள நோட்டுகளை இருவரும் களியக்காவிளை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அடித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் - இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் தலைமையிலான காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் (64), குமார் (74) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சுமார் 80 ஆயிரம் வரை புழக்கத்தில்விட வைத்திருந்தனர்.

இந்தக் கள்ள நோட்டுகளை இருவரும் களியக்காவிளை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அடித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.