கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று (மே.24) முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மூலம் 225 வாகனங்களில் காய்கறி, மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 51 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க பெருநகராட்சி நிர்வாகம் சார்பில் காய்கறிகள் மளிகைப் பொருள்களை 88 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நடமாடும் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், எம்பி செல்வம், எம்எல்ஏ சிவி எம்பி. எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டாட்சியர் நிர்மலா, காய்கறி மளிகை பொருள்கள் விற்பனை சங்க நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி மளிகைக் கடை வாகனங்கள்!
காஞ்சிபுரம்: பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ய நடமாடும் காய்கறி மளிகைக் கடை வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
![காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி மளிகைக் கடை வாகனங்கள்! காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி மளிகை கடை வாகனங்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11875337-284-11875337-1621838442498.jpg?imwidth=3840)
இதையும் படிங்க: மூன்று லட்சத்தைத் தாண்டிய கரோனா உயிரிழப்பு!
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று (மே.24) முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மூலம் 225 வாகனங்களில் காய்கறி, மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 51 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க பெருநகராட்சி நிர்வாகம் சார்பில் காய்கறிகள் மளிகைப் பொருள்களை 88 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நடமாடும் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், எம்பி செல்வம், எம்எல்ஏ சிவி எம்பி. எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டாட்சியர் நிர்மலா, காய்கறி மளிகை பொருள்கள் விற்பனை சங்க நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மூன்று லட்சத்தைத் தாண்டிய கரோனா உயிரிழப்பு!