ETV Bharat / state

ஏலம் மூலம் தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது - தொல். திருமாவளவன் - காஞ்சிபுரத்தில் தொல் திருமாவளவன்

காஞ்சிபுரம்: ஏலம் மூலம் தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

vck-thiruma-press-meet
vck-thiruma-press-meet
author img

By

Published : Dec 16, 2019, 4:27 AM IST

காஞ்சிபுரம் ஆண்டி சிருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ரோஜா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். மேலும், அப்பெண்ணின் இறப்பிற்கு காரணமாக இருந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மறைந்த ரோஜாவின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ரோஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தொல். திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விடுபவர்வர்கள், ஏலம் எடுத்தவர்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மத்திய அரசு பெரிய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் போது அப்பகுதியில் வாழும் மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்ட பின்னர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயல வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்! குற்றவாளியை கைது செய்த காவல்துறை!

காஞ்சிபுரம் ஆண்டி சிருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ரோஜா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். மேலும், அப்பெண்ணின் இறப்பிற்கு காரணமாக இருந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மறைந்த ரோஜாவின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ரோஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தொல். திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விடுபவர்வர்கள், ஏலம் எடுத்தவர்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மத்திய அரசு பெரிய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் போது அப்பகுதியில் வாழும் மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்ட பின்னர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயல வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்! குற்றவாளியை கைது செய்த காவல்துறை!

Intro:காஞ்சிபுரம் 15-12-19

உள்ளாட்சித் தேர்தலில் ஏலம் மூலம் தேர்வாகின்ற உள்ளாட்சி மன்ற தலைவர் பதவியை செல்லாது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்

Body:ஐஐடி மாணவி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை மாற்றப்பட்டது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் காஞ்சிபுரத்தில் பேட்டி



காஞ்சிபுரம் ஆண்டி சிருவள்ளூர் பகுதியை சேர்ந்த மறைந்த ரோஜா என்ற இளம் பெண் இறந்த குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன். மறைந்த பெண்ணின் தந்தை மற்றும் தாய்யை சந்தித்து ஆறுதல் கூறினர். தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மறைந்த ரோஜாவின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறுகையில்,

உள்ளாட்சித் தேர்தலில் உள்ளாட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுபவர்வர்கள் , ஏலம் எடுத்தவர்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு தேர்வாகின்ற உள்ளாட்சி மன்ற தலைவர் பதவியை செல்லாது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் எனவும்,

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கின் மூலம் ஆறுதல் கிடைத்ததாக இருப்பதாகவும் எனவும்,

Conclusion:மத்திய அரசு பெரிய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் போது அப்பகுதியில் வாழும் மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்ட பின்னர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயல வேண்டும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.