ETV Bharat / state

பேனர் கடையில் சிறுவர்கள் கைவரிசை - 50,000 ரூபாய் திருட்டு!

author img

By

Published : Oct 15, 2019, 10:41 AM IST

காஞ்சிபுரம்: பேனர் கடையில் தண்ணீர் குடிக்க வந்த சிறுவர்கள் கடையிலிருந்து 50,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கடை வீதியில் தனியார் பேனர் கடை நடத்தி வருபவர் முகமது ஆசிக். இந்நிலையில் நேற்று காலை கடையினை திறந்துவிட்டு கையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தினை கடையில் வைத்துவிட்டு ஊழியரைக் கடையில் விட்டுவிட்டு வெளியில் சென்றிருந்தார்.

மாலை கடைக்கு வந்து பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது கடையில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 12 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் கடைக்கு வந்து கடை ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

கடை ஊழியர் தண்ணீர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு அரைக்கு பேனர் போட சென்றபின் அச்சிறுவர்கள் பணப்பெட்டியிலிருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது.

சிசிடிவி காட்சி

இது குறித்து பேனர் கடை உரிமையாளர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் உத்திரமேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கடை வீதியில் தனியார் பேனர் கடை நடத்தி வருபவர் முகமது ஆசிக். இந்நிலையில் நேற்று காலை கடையினை திறந்துவிட்டு கையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தினை கடையில் வைத்துவிட்டு ஊழியரைக் கடையில் விட்டுவிட்டு வெளியில் சென்றிருந்தார்.

மாலை கடைக்கு வந்து பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது கடையில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 12 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் கடைக்கு வந்து கடை ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

கடை ஊழியர் தண்ணீர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு அரைக்கு பேனர் போட சென்றபின் அச்சிறுவர்கள் பணப்பெட்டியிலிருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது.

சிசிடிவி காட்சி

இது குறித்து பேனர் கடை உரிமையாளர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் உத்திரமேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

Intro:உத்திரமேரூரில் தனியார் பேனர் கடையில் இரண்டு சிறுவர்கள் பணம் திருடும் காட்சி சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
Body:
உத்திரமேரூர் பஜார் வீதியில் தனியார் பேனர் கடை நடத்தி வருபவர் முகமது ஆசிக். தினசரி காலையில் கடையினை திறந்து இரவு வரை கடை வைத்திருப்பார். இந்நிலையில் நேற்று காலை கடையினை திறந்துவிட்டு கையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தினை கடை டிராயரில் வைத்துவிட்டு கடை ஊழியரை கடையில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்தார். மாலை கடைக்கு வந்து டிராயரை திறந்து பார்த்த போது கடையில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராவை செக் செய்து பார்த்த போது 12 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் கடைக்கு வந்து கடை ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். கடை ஊழியர் தண்ணீர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு அரைக்கு பேனர் போட சென்றபின் டிராயரில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Conclusion:இதையடுத்து இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.