காஞ்சிபுரம்: அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதங்களில் மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீ மிதித்திருவிழா எனப்பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று, அம்மாதங்களே சிறப்புறக்கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்திலுள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதத்தை ஒட்டி 30ஆவது ஆண்டாக ஆடி மாத தீ மிதித்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று (ஆக. 07) ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு தொடங்கி மிக கோலாகலமாக நடந்தது.
அப்போது, சுப்பிரமணி (60) என்ற முதியவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தீ மிதித்தப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தீயில் விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த நிலையில் சுப்பிரமணி மீண்டும் எழுந்து தீ மிதித்தார்.
இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ அப்பகுதிகளில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: சிவகங்கை அருகே கருப்பசாமி கோவில் திருவிழா;கும்மிப்பாட்டு பாடியும் ஒயிலாட்டம் ஆடியும் அசத்திய கிராமத்தினர்..