ETV Bharat / state

தானாக நிரம்பி வரும் அனந்தசரஸ் குளம் - பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் சுத்தமான தண்ணீர் திறந்து விட உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மழைநீரால் குளம் தானாக நிரம்பி வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Aug 24, 2019, 3:45 PM IST

அனந்தசரஸ் குளம்

காஞ்சிபும் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 48 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அத்திவரதர் சிலையை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் சிலையை குளத்தில் வைத்து சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்ணீர் நிரம்பும் அனந்தசரஸ் குளம்

இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அனந்தசரஸ் குளம் தானாகவே நிரம்பிவருகிறது. இரண்டு படிக்கட்டுகள் வரை தண்ணீர் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே சிலை எடுத்தபோது, குளத்தில் இருந்த மீன்களை பொற்றாமரைக் குளத்திற்கு மாற்றியுள்ளதால், அதை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதை விற்கவும் முடியாமல், வேறு குளத்திற்கு மாற்றவும் முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

காஞ்சிபும் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 48 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அத்திவரதர் சிலையை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் சிலையை குளத்தில் வைத்து சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்ணீர் நிரம்பும் அனந்தசரஸ் குளம்

இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அனந்தசரஸ் குளம் தானாகவே நிரம்பிவருகிறது. இரண்டு படிக்கட்டுகள் வரை தண்ணீர் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே சிலை எடுத்தபோது, குளத்தில் இருந்த மீன்களை பொற்றாமரைக் குளத்திற்கு மாற்றியுள்ளதால், அதை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதை விற்கவும் முடியாமல், வேறு குளத்திற்கு மாற்றவும் முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

Intro:காஞ்சிபுரம் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் மழைநீரால் தானாகி இந்த தொடங்கியுள்ளது. தற்போது வரை இரண்டு படிக்கட்டு முதல் மூன்று படிக்கட்டு வரை மறைகிறாள் நீர் நிரம்பி உள்ளது. பொன் தாமரை குளத்தில் இருந்து நீரை அனந்தஸ் குளத்தில் தண்ணீர் விடக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவின்படி அந்த குளத்தில் உள்ள 5 டன் மீன்கள் மாற்ற முடியாமல் தவிப்பு

Body:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தநிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அங்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி இரவு, தனது இருப்பிடத்திற்கு அத்திவரதர் திரும்பினார். இந்நிலையில் அனந்தசரஸ் குளத்தில் சுத்தமான நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அனந்த சரஸ் குளம் மழை நீரால் தானகவே நிரம்பி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அனந்த சரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் எடுக்கும் முன்பு அனந்த சரஸ் குளத்திலிருந்து நீர் மற்றும் ஐந்து டன் மீன்களை பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது உயர் நீதிமன்றம் பொற்றாமரை குளத்தில் இருந்து நீரை அனந்தசரஸ் த குலத்திற்கு மாற்றக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இதனால் அக்காலத்தில் இருந்து தண்ணீரை அனந்த சரஸ் குளத்திற்கு மாற்ற முடியாமல் போனது. ஆனால் பொற்றாமரைக் குளத்தில் உள்ள 5 டன் மீன்கள் வெளியேற்ற படாமலும் குளத்தில் மாற்றப்படும் மற்றும் அதனை விற்க முடியாமலும் கோவில் நிர்வாகம் தவித்து வருகிறது.



தற்போது அவ்வப்போது காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருவதால் அனந்தசரஸ் குளத்தில் மழைநீர் இரண்டு முதல் மூன்று படிக்கட்டு வரை நிரம்பி உள்ளது. மீதமுள்ள தண்ணீரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விடவேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதற்கான ஆயத்த வேலைகளை கோவில் நிர்வாகம் எடுத்துவருகிறது.


Conclusion:பொற்றாமரை குளத்தில் உள்ள மீன்களை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.