ETV Bharat / state

‘திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது’ - அமைச்சர் ஜெயக்குமார்!

author img

By

Published : Jan 21, 2021, 5:38 PM IST

காஞ்சிபுரம்: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதில் முதல்கட்டமாக 4 கோடி ரூபாயில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் அலகு நிர்வாகக் கட்டத்துடன் இணைந்த நோய் அறியும் ஆய்வகம் மற்றும் உணவகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.21) நடைபெற்றது.

அதையொட்டி தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெருபான்மை இடங்களில் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே மக்களவையில் எங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை. தேமுதிகவும் எங்கள் கூட்டணியில்தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் மட்டும்தானே கூறியுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மௌனமாக இருப்பது ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது. அவருடைய கருத்து கிளை கழக செயலாளர் முதல் மாநில நிர்வாகிகள்வரை ஏற்றுகொண்டுள்ளார்” என்றார்.

சசிகலாக்கு பெங்களூரு மருத்துவமனையில் உயர் சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்துமா என்ற கேள்விக்கு அவர், “சசிகலா உடல் நிலையை பொறுத்தவரையில் பூரண குணமடைய வேண்டும் என்பதுதான் மனிதாபிமான வகையில் எவரும் நினைக்க கூடிய விஷயம். அவருடைய உடல்நிலை சீராக நலம் பெற வேண்டும், அவருக்குத் தேவையான சிகிச்சை அந்த மாநில அரசு வழங்கும்” எனதெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில மீன்வளத்துறை அலுவலர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பழனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முக அழகிரி புதிதாக கட்சி தொடங்குவார்; திமுக உடையும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூசகம்

நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதில் முதல்கட்டமாக 4 கோடி ரூபாயில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் அலகு நிர்வாகக் கட்டத்துடன் இணைந்த நோய் அறியும் ஆய்வகம் மற்றும் உணவகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.21) நடைபெற்றது.

அதையொட்டி தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெருபான்மை இடங்களில் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே மக்களவையில் எங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை. தேமுதிகவும் எங்கள் கூட்டணியில்தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் மட்டும்தானே கூறியுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மௌனமாக இருப்பது ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது. அவருடைய கருத்து கிளை கழக செயலாளர் முதல் மாநில நிர்வாகிகள்வரை ஏற்றுகொண்டுள்ளார்” என்றார்.

சசிகலாக்கு பெங்களூரு மருத்துவமனையில் உயர் சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்துமா என்ற கேள்விக்கு அவர், “சசிகலா உடல் நிலையை பொறுத்தவரையில் பூரண குணமடைய வேண்டும் என்பதுதான் மனிதாபிமான வகையில் எவரும் நினைக்க கூடிய விஷயம். அவருடைய உடல்நிலை சீராக நலம் பெற வேண்டும், அவருக்குத் தேவையான சிகிச்சை அந்த மாநில அரசு வழங்கும்” எனதெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில மீன்வளத்துறை அலுவலர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பழனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முக அழகிரி புதிதாக கட்சி தொடங்குவார்; திமுக உடையும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூசகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.