ETV Bharat / state

முள்புதரில் கிடந்த அரசின் இலவச மடிக்கணினிகள்...! - கயவர்களை தேடும் காவல் துறை

author img

By

Published : Sep 24, 2019, 8:01 AM IST

காஞ்சிபுரம்: கயப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த 83 மடிக்கணினிகளில் நான்கு மடிக்கணினியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி பள்ளி வளாகத்தில் உள்ள முள்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.

மடிக்கணினிகள் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கயப்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கே, கடந்த கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 83 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக இருந்தது.

இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கவிருந்த மடிக்கணினியை தலைமையாசிரியர் தனி அறையில் வைத்துப் பூட்டியுள்ளார். விடுமுறை தினமான நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளிருந்த நான்கு மடிக்கணினிகளை மட்டும் திருடி, பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு முள்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருட்டு

மடிக்கணினிகள் திருடப்பட்டதைக் கண்ட தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அங்குவந்த காவல் துறையினர் பள்ளியில் சோதனை செய்தனர்.

அப்போது திருடப்பட்ட மடிக்கணினிகள் முள்புதர்களில் வீசியது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் மடிக்கணினி திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஷேர் ஆட்டோவில் நகைகளைத் திருடும் பலே திருடிகள் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கயப்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கே, கடந்த கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 83 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக இருந்தது.

இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கவிருந்த மடிக்கணினியை தலைமையாசிரியர் தனி அறையில் வைத்துப் பூட்டியுள்ளார். விடுமுறை தினமான நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளிருந்த நான்கு மடிக்கணினிகளை மட்டும் திருடி, பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு முள்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருட்டு

மடிக்கணினிகள் திருடப்பட்டதைக் கண்ட தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அங்குவந்த காவல் துறையினர் பள்ளியில் சோதனை செய்தனர்.

அப்போது திருடப்பட்ட மடிக்கணினிகள் முள்புதர்களில் வீசியது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் மடிக்கணினி திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஷேர் ஆட்டோவில் நகைகளைத் திருடும் பலே திருடிகள் கைது!

Intro:அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த 83 மடிக்கணினிகளில் 4 மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி பள்ளி வளாகத்தில் முட்புதரில் வீசி சென்றுள்ளனர்

Body:காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கயப்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் தற்பொழுது படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறந்த மாதம் மடிக்கணினி வழங்கப்பட்டது கடந்த கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த 83 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு எடுத்துவரப்பட்டு தலைமையாசிரியர் அருகே உள்ள ஒரு அறையில் 83 மடிக்கணினியை வைத்துள்ளனர் நேற்று தினம் விடுமுறை என்பதால் மர்மநபர்கள் கதவின் தாழ்பாள் உடைத்து உள்ளிருந்த மடிக்கணினிகளில் 4 மடிக்கணினிகளை திருடிய மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு முட்புதரில் வீசி சென்று உள்ளனர் லேப்டாப் திருடப்பட்டது குறித்து பள்ளி தலைமையாசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .Conclusion:அங்கு வந்த போலீசார் தேடியபோது திருடப்பட்ட மடிக்கணினிகள் முள்புதர்கள் வீசியது தெரியவந்தது அதனை அடுத்து கைப்பற்றிய போலீசார் திருடிச்சென்று முள் புதரில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.